டெல்லியில் காற்று மாசுவை தடுக்க பிஎஸ்6 எரிபொருள் விற்பனை விரைவில் துவக்கம்...!!
டெல்லியில் காற்று மாசுவை தடுக்க பிஎஸ்6 எரிபொருள் விற்பனை விரைவில் துவக்கம்...!!
டெல்லியில் பனிமூட்டம், புகைமூட்டத்துடன் வாகனப் புகையும் சேர்த்துக்கொண்டு சுற்றுப்புற காற்றில் அதிக மாசை ஏற்படுத்தி வருகின்றன.

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுபட்டுத்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது பிஎஸ்6 விதிமுறைகளுக்கு உட்பட்ட எரிபொருளை வாகனங்களுக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2018 ஏப்ரல் 1 முதல் இந்த புதிய எரிபொருள் விற்பனை செய்யப்படும் என மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் பிஎஸ்4 விதிகளுக்கு உட்பட்ட எஞ்சின்களை பெற்ற வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பனிக்காலம் தொடங்கிய பிற்பாடு டெல்லியில் பனிமூட்டம் மற்றும் வாகனப் புகையால் அந்நகரத்தின் காற்று மிகவும் மாசடைந்து வருகிறது.
Recommended Video


இதனால் பிஎஸ்5 மாசு விதிமுறைகளை தவிர்த்து விட்டு நேரடியாக பாரத் ஸ்டேஜ் 6 வாகனங்களை ஏப்ரல் 1, 2018 முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

பிஎஸ்6 எரிபொருளை டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்ய எண்ணை நிறுவனங்களுடன் மத்திய அரசு கைக்கோர்த்துள்ளது.

பிஎஸ்6 எரிபொருளில் நைட்ரஜன்-அக்சைடு மாசு டீசல் கார்களில் 80 சதவீதம் குறைவாகவும், பெட்ரோல் கார்களில் 25 சதவீதம் குறைவாகவும் இருக்கும் என அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

டெல்லியில் அடுத்த ஆண்டு பிஎஸ்6 வாகன விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் அதெ நேரத்தில், நாடு முழுவதும் 2020ம் ஆண்டில் பிஎஸ்6 வாகன விதிமுறை அமல்படுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications








