தமிழகத்தின் முதல் மின்சார பேருந்து போக்குவரத்து சென்னியில் அறிமுகம்... சோதனை ஓட்டம் தொடங்கியது..!!
தமிழகத்தின் முதல் மின்சார பேருந்து போக்குவரத்து சென்னியில் அறிமுகம்... சோதனை ஓட்டம் தொடங்கியது..!!
தமிழக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக பனிமனையில் சாலை பாதுகாப்பு பற்றிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் சாலை பாதுகாப்பு மேம்பாடு மற்றும் சாலையில் நடைபெறும் விபத்துகளை தடுப்பதற்கும், குறைப்பதற்குமான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

ஆலோசனைக்கூட்டம் முடிந்த பிற்பாடு, சென்னை மாநகரத்தில் மின்சார பேருந்து அறிமுகப்படவுள்ள நிலையில் அதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் மின்சார பேருந்து ஓட்டி காண்பிக்கப்பட்டதுடன், அவரும் இதில் பயணித்து பார்த்தார்.

மெரினா கடற்கரை, காந்தி சிலை வரை சென்று, பல்வேறு சாலை அமைப்புகளில் மின்சார பேருந்து இயக்கி பார்க்கப்பட்டது.
Recommended Video


ஒரு தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையில் இந்த சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் செய்யப்பட்ட பேருந்தில் குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

தமிழகத்தில் முதன்முறையாக மின்சார பேருந்து பயன்பாடு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 320 கி.மீ தூரம் வரை இந்த பஸ் இயங்கும் திறனை பெற்றிருக்கிறது.

இந்த மின்சார பேருந்து சென்னையில் ஒரு மாதம் சோதனை முறையில் வலம்வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து மின்சார பேருந்து பயன்பாடு என்பது மக்களின் தேவைக்காக விரைவில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் தமிழக அரசு உள்ளது.


Click it and Unblock the Notifications








