Just In
- 16 min ago சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- 1 hr ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 1 hr ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 3 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மாசு உமிழ்வு மோசடியில் அடுத்து சிக்கும் பிரபல நிறுவனம்; பின்னி பெடல் எடுக்கும் ஜெர்மன் அரசு..!!
மாசு உமிழ்வு மோசடியில் அடுத்து சிக்கும் பிரபல நிறுவனம்; பின்னி பெடல் எடுக்கும் ஜெர்மன் அரசு..!!
ஜெர்மன் ஆட்டோமேக்கரான டெய்ம்லர் நிறுவனம் மாசு விதிகளை பின்பற்றாமல் 10 லட்சம் வாகனங்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுப்பற்றி ஜெர்மனின் ஸ்டூட்கெர்ட் நகர நீதிமன்றம் டெய்ம்லர் மீது விசாரணை மேற்கொண்டதாக மியுனிக் நகரத்தில் இயங்கக்கூடிய சியூட்டேயுச்சே சைட்டோங் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய மாசு விதிகள் கொண்ட டீசல் கார்கள் என்று கூறி, மாசு உமிழ்வு செய்யும் கார்களை டெய்ம்லர் விற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை கடந்த மே மாதம் 23ம் தேதி, நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளது போன்ற தகவல்களை சியூட்டேயுச்சே சைட்டோங் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றம் விசாரணைக்காக வழங்கிய ஆவணங்களில், சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மாசு உமிழ்வு செய்யும் கார்கள் விற்கப்பட்டு உள்ளது, அதனால் மெர்சிடிஸ்-பென்ஸ் தயாரிப்புகளுக்கு பெரிய பிரச்சனை உருவாகலாம் என்று தெரிகிறது.
இந்த கார்கள் அனைத்தும் 2008 முதல் 2016 வரை ஜெர்மன் உட்பட சில ஐரோப்பா நாடுகள் மற்றும் அமெரிக்காவில் விற்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
OM 642 மற்றும் OM 651 என்ற குறிப்பு எண்களை கொண்ட எஞ்சின்கள் தான் கார்களில் பொறுத்தப்பட்டுள்ளன. இதை வைத்தே ஸ்டூட்கெர்ட் நீதிமன்றம் மாசு உமிழ்வை கணக்கிட்டு வருகிறது.
ஜெர்மனில் எழுந்துள்ள இந்த புகாரை குறித்து கருத்து தெரிவித்துள்ள டெய்ம்லர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர்,
கடந்த 8 ஆண்டுகளாக முறைகேடான கார்களை டெய்ம்லர் விற்பனை செய்திருந்தால், அது எப்பொழுதோ ஜெர்மனில் தடையை பெற்றிருக்கும் இருந்தாலும், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்றார் அவர்.
மாசு உமிழ்வு மோசடியில் வோக்ஸ்வேகனின் முறைகேடான கார் விற்பனை வெளியானதை அடுத்து, பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடினமான நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்றன.
தற்போது உலகின் முதன்மையான டெய்ம்லர் கார் தயாரிப்பு நிறுவனமும் இந்த முறைகேட்டில் சிக்கி இருப்பது ஆட்டோமொபைல் உலகை அதிர்ச்சியுற செய்துள்ளது.
-
பொண்ணு ஆசைப்பட்டதற்காக 3 கோடி ரூபாய் காரை பரிசளித்த அப்பா! இதுக்கு முன்னாடி யாருமே இந்த காரை வாங்குனது இல்ல!
-
ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!