இந்தியாவிற்கான மின்சார பேருந்துகளை உருவாக்க கைக்கோர்த்த பிரம்மாண்ட நிறுவனங்கள்..!!
இந்தியாவிற்கான மின்சார பேருந்துகளை உருவாக்க கைக்கோர்த்த பிரம்மாண்ட நிறுவனங்கள்..!!
மாருதி சுஸுகி, டொயோட்டா, ஹோண்டா போன்ற முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார கார் தயாரிப்பில் மும்முரமாகி உள்ளன.

கனரக வாகனங்களை தயாரிக்கும் ஐஷர் மோட்டார்ஸ்தற்போது அதன் மின்சார பேருந்து உருவாக்கம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

நகர பகுதிகளுக்கு ஏற்றவாறான மின்சார பேருந்துகளை ஐஷர் மோட்டார்ஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக, அந்நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஷியாம் மாலர் கூறியுள்ளார்.

நகரங்களின் உட்புற பகுதிகளுக்குள் மட்டும் இயங்கும் வகையில் இந்த புதிய மின்சார பேருந்துகளின் உருவாக்கம் இருக்கும் என்றும் ஷியாம் மாலர் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆரம்பக் கட்ட பணிகளில் ஐஷர் மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. விரைவில் அதுப்பற்றிய முழு தகவல்களையும் அந்நிறுவனம் வெளியிடும்.

வோல்வோ டிரக்ஸ் உடன் இணைந்து மின்சார வாகனத்தை ஐஷர் மோட்டார்ஸ் தயாரிக்கவுள்ளது. அதற்கு இரு நிறுவனங்களும் இணைந்து 'வி.இ
கமர்ஷியல் வெய்கில்ஸ்' என்று பெயரிட்டுள்ளன.

வோல்வோ உடன் பங்கு வகிப்பத்து மகிழ்ச்சி எனவும், இதனால் சிறந்த தொழில்நுட்பம் பெற்ற மின்சார வாகனங்கள் இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கும் என ஷியாம் மாலர் கூறியுள்ளார்.

ஐஷர் மோட்டார்ஸ் போலவே டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லெய்லேண்ட் நிறுவனங்கள் மின்சார பேருந்துகள் தயாரிக்கும் அறிவிப்பை முன்னரே தெரிவித்திருந்தன.

இதை தொடர்ந்து கோல்டுஸ்டோன்- பி.ஒய்.டி நிறுவனம் இந்தியாவின் முதல் மின்சார பேருந்தை ஹிமாச்சல பிரதேசத்தின் மணலி-ரோங்டாங் வழியில் போக்குவரத்து பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் வோல்வோ நிறுவனங்கள் டீசலில் இயங்கும் ஹைஃபிர்ட் ரக பேருந்துகளை நவி மும்பை பகுதியில் 2016ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

தற்போது ஐஷர் மோட்டார்ஸ் மின்சார பேருந்து தயாரிப்பிலும் கால்பதிக்கிறது. இதற்கான திட்டங்கள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

மின்சார பேருந்திற்கான ஜிஎஸ்டி வரி விதிப்பில் சலுகைகள் கொண்டு வந்தால், அதற்கான கட்டுமானம் மேலும் விரிவடையும் என்பது ஐஷர் மோட்டார்ஸின் கருத்தாக உள்ளது.

இந்தியாவில் ஐஷர் மோட்டார்ஸ் இலகு மற்றும் நடுத்தர ரக வாகன பயன்பாட்டில் பெரிய சந்தை மதிப்பை பெற்றுள்ளது. இருந்தாலும் அவற்றில் மின்சார வாகனங்கள் தயாரிக்குமா என்பதை அந்நிறுவனம் இன்னும் முடிவு செய்யவில்லை.

2030ம் ஆண்டில் மின்சார ஆற்றலுக்கு வாகன பயன்பாட்டை மாற்றவேண்டும் என்பது இந்திய அரசின் எண்ணம். இந்த முயற்சியில் அரசுடன் இணையும் முதல் நிறுவனமான ஐஷர் மோட்டார்ஸ் உள்ளது.

வருங்கால போக்குவரத்து பயன்பாட்டில் மின்சார பேருந்துகளுக்கு பெரிய கட்டுமானம் உருவாக்கப்படும். குறிப்பாக பெரும்பாலான பொதுமக்கள் பொது போக்குவரத்து தேவைகளை அதிகளவில் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

இதை கருத்தில் கொண்டு தான் ஏற்கனவே டாடா மோட்டார்ஸ், அசோக் லெய்லேண்ட் நிறுவனத்துடன் இணைந்து மின்சார பேருந்து தயாரிப்பில் களமிறக்கியது. தற்போது ஐஷர் மோட்டார்ஸும் மின்சார வாகனங்கள் தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது


Click it and Unblock the Notifications








