மின்சார காரை சார்ஜிங் செய்ய டிஜிட்டல் பரிவத்தனை மூலம் கட்டணம் செலுத்தலாம்..!!
மின்சார காரை சார்ஜிங் செய்ய டிஜிட்டல் பரிவத்தனை மூலம் கட்டணம் செலுத்தலாம்..!!
இந்தியாவில் 2030ம் ஆண்டிற்குள் வாகன பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இதற்கான கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

அதில் முதற்கட்டமாக மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் பெறும்போது அதற்குரிய பணத்தை பீம் செயலி மற்றும் பாரத் கியூ.ஆர் கோட் மூலம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சார்ஜிங் உள்கட்டமைப்பை நெறிமுறைப்படுத்தும் குழு கொடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மின்சார கார்களுக்கான சார்ஜிங் கட்டணத்தை டிஜிட்டல் பரிவர்தனையின் கீழ் கொண்டுவந்துள்ளது.

பாதகங்களை மின்சார கார் சார்ஜிங் கட்டணம் குறித்து தொடர்ந்து பல்வேறு சாதக பாதகங்களை நெறிமுறை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் அனைத்து ஒரு தரம் கொண்டவையாக இருக்க வேண்டும். எல்லா ரக கார்களுக்கு இந்தியளவில் எங்கு வேண்டுமானாலும் சார்ஜிங் பெற முடியும் என்ற கட்டமைப்பு இதில் முக்கியமானது.
Recommended Video


சார்ஜிங் பெறும்போதே கட்டணம் செலுத்துவது மற்றும் VIN (வாகனம் அடையாள எண்) அடிப்படையிலான பயனர் கணக்கைத் தொடங்குதல் உட்பட பல தேர்வுகளை பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மின்சார கார்களுக்கு சார்ஜிங் கட்டணம் யூனிட் முறையில் வசூலிக்கப்படும். வாடிக்கையாளருக்கு தேவையான சார்ஜிங் கொடுக்கப்பட்ட பிறகே அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்படும்.

வாகனங்களால் காற்று மாசு அதிகரித்து வருவதால், மின்சார கார் பயன்பாட்டை கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது.
அனைத்தும் மின்சார மையம் என்று ஆன பிறகு, அதற்குரிய வாகன பெருக்கும் மேலும் அதிகரிக்கும்.

அதன்காரணமாக குறிப்பிட்ட தூரங்களில் பெரிய மற்றும் அனைத்து வசதிகள் கொண்ட சார்ஜிங் நிலையங்களை மத்திய அரசு நிறுவ வேண்டும் என்பது இந்த நெறிமுறை குழுவின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

குறிப்பாக மின்சார வாகனங்களை தயாரிக்க பல்வேறு வாகன நிறுவனங்கள் தயாராக இருந்தாலும், அதற்கான கட்டமைப்புகள் இந்தியாவில் சரிவர இல்லை என்பது குற்றச்சாட்டுகளாக இருக்கிறது.

இதை ஒழுங்குப்படுத்தி, மின்சார வாகன கட்டுமானத்திற்கு மத்திய அரசு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, வாகன நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

இந்தியா மின்சார வாகன பயன்பாட்டை வெறும் பெயரளவில் தான் சொல்லி வருகிறது. அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கினால் மட்டுமே மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் மின்சார வாகன பயன்பாட்டின் மீது நம்பிக்கை எழும்.

தற்போது நெறிமுறை குழு பரிந்துரைத்துள்ள சில அடிப்படை கட்டமைப்புகள் மீது மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது நேர்மறையாக செயல்பாடு.

காற்று மாசுவை ஒழிப்பதற்கு இதை முக்கிய செயல்பாடாக கொண்டு, நெறிமுறை குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு சார்ஜிங் நிலையங்களை அமைப்பத்தில் தீவரமாக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








