2040 முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடா... ஆயத்தமாகும் மின்சார வாகன பயன்பாடு..!!
2040 முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடா... ஆயத்தமாகும் மின்சார வாகன பயன்பாடு..!!
ஃபிரான்ஸ் நாட்டில் வரும் 2040ம் ஆண்டு தொடங்கி பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும், பெட்ரொல் டீசல் வாகனங்களை தடை செய்ய இந்தியா, சீனா உட்பட உலகளவில் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன.

இதில் நார்வே அரசு அந்நாட்டினரை மின்சார வாகனங்களை பயன்படுத்த வைத்து அதில் வெற்றியையும் பார்த்துள்ளது.
நார்வேவின் இந்த முயற்சிக்கு பிறகே, மின்சாரத்தை வாகனங்களுக்கான ஆற்றலாக மாற்ற பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன.

அதில் நார்வேவிற்கு பிறகு சீனா நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பயன்பாட்டை உருவாக்க முயற்சித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசு குறைபாட்டை களையவே மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க ஃபிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஃபிரான்ஸில் வெறும் 1.2 சதவீத அளவில் மட்டுமே மின்சார வாகன பயன்பாடு இருந்து வருகிறது.

ஃபிரான்ஸில் கார்பன் ஆக்ஸைடு வாயுவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அந்த அமில வாயூவை வெளியிடும் வாகனங்களை 2040ம் ஆண்டில் இருந்து தடை செய்ய அந்நாட்டின் சூழலியல் துறை அமைச்சர் நிக்கோலஸ் முடிவு செய்துள்ளார்.

பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தின் படி, ஃபிரான்ஸில் உள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை 2022க்குள் மூட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிறகு ஃபிரான்ஸிற்கு தேவைப்படும் மின்சாரம் அணுமின் மூலம் தயாரிக்கப்படும். இதனால் மின்சாரத்தின் பயன்பாட்டை 50 சதவீதமாக குறைக்க அமைச்சர் நிக்கோலஸ் ஆலோசித்துள்ளார்.

மின்சாரத்தின் பயன்பாடு குறைக்கப்பட்டால், ஃபிரான்ஸ் 2050ம் ஆண்டிற்குள் மரபு சார எரிசக்தி மூலம் ஆற்றலை உற்பத்தி செய்துக்கொள்ளும் நிலைக்கு மாறிவிடும்.

ஃபிரான்ஸ் மட்டுமில்லாமல், ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க முடிவு செய்துள்ளன.

இதில் நார்வே வெற்றியடைந்ததை அடுத்து, மற்ற ஐரோப்பிய நாடுகளும் விரைவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை குறைத்துவிட்டு மின்சார வாகனங்களை பயன்படுத்தும் முடிவில் உள்ளன.


Click it and Unblock the Notifications








