Just In
- 1 hr ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 6 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
இந்தியாவில் செவர்லே கார் பிராண்டு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... ?!
இந்தியாவில் செவர்லே கார் வர்த்தகத்தை நிறுத்துவதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் செவர்லே கார் வர்த்தகத்தை நிறுத்துவதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2003ம் ஆண்டு ஒபல் கார் பிராண்டுக்கு பதிலாக, செவர்லே பிராண்டில் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்.
குஜராத் மாநிலம் ஹலோல் மற்றும் மஹாராஷ்டிர மாநிலம் தலேகான் ஆகிய இடங்களில் கார் ஆலைகளை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் எதிர்பார்த்த அளவு வர்த்தகத்தை ஜெனரல் மோட்டார்ஸ் பெற முடியவில்லை.
தொடர்ந்து மிக மோசமான வர்த்தகத்தை பதிவு செய்து வந்ததுடன், மாசு உமிழ்வு மோசடியிலும் சிக்கியது. இதையடுத்து, செவர்லே கார்கள் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் அவநம்பிக்கை எழுந்தது.
இந்த நிலையில், வர்த்தகம் மிக மோசமான நிலையில் இருந்து வந்ததையடுத்து, இந்தியாவில் கார் வர்த்தகத்தை நிறுத்துவதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இந்த மாத இறுதியில் ஹலோல் ஆலையை மூடுவதற்கு முடிவு செய்திருக்கும் அந்த நிறுவனம் க்ரூஸ் காரின் உற்பத்தியை ஏற்கனவே நிறுத்தி விட்டது. தவேரா கார் உற்பத்தியும் வரும் 28ந் தேதியுடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே செவர்லே கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீடு செய்திருக்கும் டீலர்களை மனதில் வைத்து படிப்படியாக கார் விற்பனையை நிறுத்துவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
மேலும், வலது பக்க டிரைவிங் வசதி கொண்ட கார் மாடல்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இடதுபக்க டிரைவிங் வசதி கொண்ட கார்கள் மட்டும் உற்பத்தி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
இந்த கார்கள் மெக்சிகோ நாட்டுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. அடுத்த மாதம் முதல் இந்தியாவில் கார் விற்பனையை முழுவதுமாக நிறுத்துவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனிடையே, பீட் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எசென்சியா செடான் கார் சோதனை ஓட்டத்தில் இருந்து வருகிறது. இந்த கார் விற்பனைக்கு வருமா அல்லது கைவிட படுமா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
மேலும், ஹலோல் பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே கார் ஆலையை பயன்படுத்திக் கொள்ள சீனாவை சேர்ந்த செயிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: ET Auto
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி