Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நள்ளிரவு நடைபெற்ற கூட்டத்தில் டிராக்டர் உதிரிபாகங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி வரி அமல்..!!
அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த டிராக்டர் உதிரிபாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பி மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.
டிராக்டர் உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. நள்ளிரவு நடைபெற்ற கூட்டத்தில் இந்த புதிய வரி விதிப்பு குறித்து அறிவிப்பு வெளியானது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி மதிப்பை தரும் ஜி.எஸ்.டி இன்று நாடு முழுவதும் நள்ளிரவு 12 மணியளவில் அமலுக்கு வந்தது.
அதற்கு முன்னதாக நடைபெற்ற டெல்லியில் மத்திய பொருளாதார அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இன்று நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் டிராக்டர் உதிரிபாகங்கள் மீதான ஜி.எஸ்டி வரி மதிப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வரி மாற்றத்தை மத்திய அரசு முன்னெடுத்த போது, டிராக்டர் உதிரிபாகங்களுக்கு 28 சதவீத வரியும், விவசாய உரங்களுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக உதிரி பாகங்கள் உட்பட ஒரு டிராக்டரை வாங்கும் செலவும் சுமார் ரூ.30,000 முதல் ரூ.34,000 வரை கூடுதலாக அதிகரிக்கும் நிலை இருந்தது.
மேலும் பி.எம்.டபுள்யூ, மெர்சிடிஸ் போன்ற ஆடம்பர கார்களை ஜி.எஸ்.டி-யில் குறைவான வரி மதிப்பிற்குள் கொண்டு வந்து விட்டு, விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர்களுக்கு 28 சதவீத வரி விதிப்பு ஏற்க முடியாது என்று நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது.
இதனால் விரைவில் டிராக்டர் உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தை மத்திய அரசு முன்னெடுக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால் ஜிஎஸ்டி அமலாகும் வரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகமல் இருந்த நிலையில், விவசாயிகள் மத்தியில் சோகம் நிலவியது.
ஆனால் முன்னறிவிப்பு இல்லாமல், டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அருண் ஜெட்லி உட்பட பலர் டிராக்டர் உதிரிபாகங்கள் மற்றும் விவசாய உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி மதிப்பில் மாற்றம் செய்துள்ளனர்.
அதன்படி இனி டிராக்டர் உதிரிபாகங்களின் விலை ஜி.எஸ்.டி-யில் 18 சதவீத வரி மதிப்பை பெறும். அதபோல உரங்கள் 5 சதவீத வரி மதிப்பை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
வரி உயர்ந்தால், விவசாயத்திற்கான இடுபொருட்களின் விலையும் உயரும். இதை அடிப்படையாக வைத்து பல்வேறு விவசாய அமைப்புகள் மத்திய அரசிடம் ஜி.எஸ்.டியில் விவசாயத்திற்கான வரி உயர்வை மாற்றம் செய்ய வலியுறுத்தி வந்தன.
தொடர்ந்து எழுந்த கோரிக்கை காரணமாக இன்று நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவசாய தேவைகளுக்கான பொருட்களில் வரி விகிதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.