இந்தியாவில் ஹைஃபிரிட் கார் விற்பனைக்கு பிரபல நிறுவனம் கும்பிடு..!! காரணம் இதுதான்.
இந்தியாவில் ஹைஃபிரிட் கார் சந்தைக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு வெளியேறும் பிரபல நிறுவனம்..!!
ஜிஎஸ்டி வரி வதிப்பிற்கு இந்தியா மாறிய பிறகு பெட்ரோல், டீசல் கார்கள் விட ஹைஃபிர்ட் கார்களுக்கான வரி வதிப்பு அதிகரித்தது.

இதனால் இந்தியாவில் ஹைஃபிரிட் கார்களை விற்பதற்கான முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளது ஹூண்டாய் நிறுவனம்.

2018ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்ஃபோவில் ஹூண்டாய் நிறுவனம் புதிய ஐயானிக் என்ற ஹைஃபிரிட் காரை அறிமுகப்படுத்தும் முனைப்பில் இருந்தது.
Recommended Video


ஆனால் இந்தியாவில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பிறகு ஐயானிக் ஹைஃபிரிட் காரை விற்கபோவதில்லை என்று முடிவு எடுத்துள்ளது.

ஜிஎஸ்டி-க்கு கீழ் ஹைஃபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்கள் 28 சதவீத வரி மற்றும் 15 சதவீத செஸ் வரியை பெறுகின்றன.

இதனால் மொத்தமாக 43 சதவீத வரியை ஹைஃபிரிட் கார்கள் எட்டுகின்றன. முன்னர் வெறும் 30.3 சதவீத வரி மட்டுமே.

ஐயானிக் மட்டுமில்லாமல், தற்போது 5வது தலைமுறையாக வெளிவரும் வெர்னா காரில் மைல்ட் ஹைஃபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார் மாடலையும் வெளியிட ஹூண்டாய் திட்டமிட்டு இருந்தது.

ஆனால், ஜிஎஸ்டி-யின் கீழ் அதிரடியான விலையை பெறுவதால் அதற்கான முடிவில் இருந்து ஹூண்டாய் பின்வாங்கியது. மேலும் மத்திய அரசு ஹைஃபிரிட் கார்களுக்கான ஃபேம் முறையையும் நீக்கியது.

இதுகுறித்து ஹூண்டாயின் நிர்வாக இயக்குநரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஒய்.கே. கூ பேசும்போது, "இந்தியாவில் ஜிஎஸ்டி-யால் ஹைஃபிரிட் கார்கள் பெரிய ஏற்றத்தை சந்திக்கபோவதில்லை. அதனால் மைல்ட் ஹைஃபிரிட்டில் இந்தியாவில் தயாரிப்பதாக இருந்த வெர்னா கார் மாடல் நிறுத்தபப்ட்டது" என்று கூறினார்.

பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்டுகளில் தயாராகியுள்ள ஹூண்டாயின் கிரெட்டா மாடல் கார் 2018ம் ஆண்டு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஹூண்டாயின் இந்த திடீர் முடிவால் கிரெட்டா ஹைஃபிரிட் கார் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்குமா என்பதில் ஐயப்பாடு எழுந்துள்ளது.

ஜிஎஸ்டி-க்கு கீழ் ஹைஃப்ரிட் கார்களுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பால் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இருந்தாலும் மஹிந்திரா மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் ஹைஃபிரிட் கார்களை தயாரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஜிஎஸ்டி-க்கு கீழ் ஹைஃபிரிட் கார்களுக்கான வரி விதிப்பை குறைக்க கோரிக்கை வைத்திருக்கின்றன.

ஆனால் அரசாங்காமோ சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகன விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

ஹைஃபிரிட் கார்களுக்கு ஜிஎஸ்டியில் வரியை உயர்த்தியது அரசாங்கம் தான். மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதும் அரசாங்கம் தான். இதில் அரசாங்கத்தில் நேர்மையான முகம் தான் என்ன என்பதில் தான் பலதரப்பட்ட மக்களின் கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications








