மின்சார கார் தயாரிப்பிலிருந்து பின்வாங்கியது ஹோண்டா... காரணம் இதுதான்..!!
மின்சார கார் தயாரிப்பிலிருந்து பின்வாங்கியது ஹோண்டா... காரணம் இதுதான்..!!
இந்தியாவில் ஜாஸ் மற்றும் சிட்டி கார்கள் ஹைஃபிரிட் தொழில்நுட்பத்தில் வெளிவரும் என ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை அறிமுகப்படுத்த இருந்த நிலையில், முதற்கட்டமாக அது ஹைஃபிரிட் ரக கார்களை வெளியிடும் என்று இடி-ஆட்டோ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வில் ஹோண்டா ஈடுபட்டு வருகிறது.
விரைவில் நமது நாட்டிற்கு ஏற்றவாறான கார்களை ஹோண்டா அடுத்தடுத்து அறிமுகம் செய்யவுள்ளது.

ஹோண்டா தயாரிக்கும் அனைத்து மின்சார கார்களும், ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாற்றான மற்றும் சூழலுக்கு தகுந்த தயாரிப்பு அம்சங்களோடு இருக்கும்.
Recommended Video


இதுப்பற்றி பேசிய ஹோண்டா இந்தியாவின் தலைமை நிர்வாக இயக்குநர் யோச்சிரோ ஊயெனோ,
"குறிப்பட்ட சூழலுக்கு அடிப்படையில் மின்சார பேட்டரிக்களை தயாரித்தால், அதனுடைய செயல்பாடு நீண்ட நாட்களுக்கு இருக்கும்" என்று கூறியுள்ளார்.

மேலும் இடம், பொருள் மற்றும் தேவையின் அடிப்படையில் ஒரு பொருளை உருவாக்கும் போது, அதற்கான மதிப்பையும் எளிதாக கணக்கிட முடியம் என்பதும் யோச்சிரோ ஊயெனோவின் கருத்தாக உள்ளது.

இதன்மூலம் ஹோண்டா மின்சார கார்களுக்கான கட்டமைப்பு இந்தியாவில் தயாரான பிறகே அதற்கு ஏற்ற கார்களை வெளியிடும் என்பது நமக்கு தெளிவாகிறது.

அதற்கு முன்னதாகவே தற்போது ஜாஸ் மற்றும் சிட்டி என இரண்டு மாடல் கார்கள் ஹைஃபிரிட் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கவுள்ளது.

இந்தியாவிற்கு இந்த இரண்டு கார்களில் ஹைஃபிரிட் தொழில்நுட்பம் புதிது என்றாலும், பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அவை ஏற்கனவே விற்பனையில் உள்ளன.

அறிவிப்பின் வாயிலாக பெரிய கவனத்தை பெற்றுள்ள ஹோண்டாவின் புதிய சிட்டி மற்றும் ஜாஸ் ஹைஃபிரிட் கார்கள், இந்தியாவில் 2019 முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

அடுத்தடுத்த மூன்று ஆண்டுகளில் ஹோண்டா 6 புதிய கார்களை இந்தியாவில் களமிறக்க ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பு ஒருபுறம் இருக்க, தற்போது மேலும் ஹைஃபிரிட் சிட்டி மற்றும் ஜாஸ் கார்கள் வெளியாக இருப்பது புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

2030ம் ஆண்டில் வாகனங்கள் அனைத்தும் மின்சார மையம் என்பது தான் இந்திய அரசின் முயற்சி. ஏற்கனவே பல்வேறு வாகன நிறுவனங்கள் இந்தியாவிற்கு ஏற்ற மின்சார கார் உற்பத்தியில் இறங்கியுள்ளன.

ஐஷர் மோட்டார்ஸ் சமீபத்தில் இந்தியாவிற்கான மின்சார பேருந்துகளை தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது.

இந்த பட்டியலில் புதியதாக தற்போது ஹோண்டாவும் இணைந்துள்ளது. இருந்தாலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் உட்பட முறையான கட்டமைப்புகளும் அடுத்தடுத்து உருவாக்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications








