மீண்டும் அச்சுறுத்தும் வானகிரை ரேன்சேம்வேர் வைரஸ்..! இம்முறை ஹோண்டாவை குறிவைத்தது..!!
சமீபத்தில் உலகையே அச்சுறுத்திய வானகிரை ரேன்சேம்வேர் வைரஸ் தற்போது ஹோண்டா நிறுவனத்தை தாக்கியுள்ளது.
பிரபல ஹோண்டா மோட்டார் நிறுவனம் ஜப்பானில் வாகன தயாரிப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

பிரபல ஹோண்டா மோட்டார் நிறுவனம் ஜப்பானில் வாகன தயாரிப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்காக ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள காரணத்தால் உலக ஆட்டோமொபைல் துறை அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஹோண்டாவின் தொழிற்சாலை சாயாமா பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இங்கு கடந்த 19ம் தேதி முதல் வாகன தயாரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி தற்போது காட்சியில் இல்லாமல் இருக்கும் வானகிரை ரேன்சோம் வைரஸ், மீண்டும் தலை எடுத்து உள்ளது.

ஹோண்டாவின் கிளைகள் அமைந்துள்ள ஜப்பான், வட அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளிலுள்ள நெட்வெர்க்கில் ரேன்சோம் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஹோண்டா தனது தலைமையகம் அமைந்துள்ள டோக்கியோவின் தொழிற்சாலையில் வாகன தயாரிப்பு பணிகளை தற்காலிமாக நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சிஸ்டத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், வானகிரை ரேன்சோம் வைரஸ், பல தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், மற்றும் இதர வணிக நிறுவனங்களில் பரவியது இருந்தாலும் மற்ற ஆலைகளில் உற்பத்தி தடையின்றி நடந்ததாக கூறியுள்ளார்.

ஹோண்டாவிற்கு முன்னதாக நிஸான், ரெனால்ட் போன்ற அதனுடைய போட்டி நிறுவனங்களும் வானகிரை ரேன்சோம் வைரஸின் தாக்குதலுக்கு உள்ளாகின.

அப்போது அந்த நிறுவனங்கள் இந்தியா உட்பட ஜப்பான், இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ரோமேனியா போன்ற நாடுகளில் இருந்த அவற்றின் அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தியை நிறுத்தின.

உலகளவில் ரேன்சேம்வேர் வைரஸ் 150 நாடுகளில் உள்ள சுமார் 2 லட்சம் கணினிகளை தாக்கின. அடுத்த சில மாதங்களில் ரேன்சோம்வேரின் அப்டேட் வெர்ஷன் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக அப்போதே பல கணினி வல்லுநர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








