மழை வெள்ளத்தில் கார்கள் மூழ்காமல் இருக்க கார்களுக்கான ’ரெயின் கோட்’ அறிமுகம்..!!
மழை வெள்ளத்தில் கார்கள் மூழ்காமல் இருக்க கார்களுக்கான ’ரெயின் கோட்’ அறிமுகம்..!!
சில சமயங்களில் தீர்க்கவே முடியாது என்று நினைத்த பிரச்சனைகளை அமைதியான பேச்சு வார்த்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.

இந்தியாவில் வெயில், குளிர், மழை என மாறுபடும் காலமாற்றங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
சரியாக சொல்லவேண்டும் என்றால், அவை அனைத்தும் அளவை மீறிய காலவரையோடு நிலைபெறுகின்றன.

கடந்த பல ஆண்டுகளாகவே மாறிவரும் கால மாறுபாடுகளை நாம் உணரமுடிகிறது. அதற்கு சமீபத்திய சாட்சி தான் மும்பையில் பெய்த கனமழை.
Recommended Video


இந்தியாவில் பெரிய நகரங்களில் ஒன்றான மும்பை 12 வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு தீவிர மழையை பார்த்திருக்கிறது. பெரியளவில் அந்த நகரம் சமீபத்திய மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதே நிலைமை சென்னை போன்ற தென் நகரங்களிலும் விரைவில் அமையலாம் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஆகையால் இந்தியாவில் மழைக்காலம் இப்போது வரை இனியும் தொடரும் நிலையில் தான் உள்ளது.

ஒரு பெருமழைக்கு பிறகு அமைதி திரும்புவது இயல்புதான் என்றாலும். அந்த மழையில் நாம் உடமைகளை இழந்திருந்தால் அந்த சோகம் பெரிய பாதிப்புகளை நம்முள் ஏற்படுத்திவிடும்.

நாம் நம்மை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளலாம். ஆனால் நமது உடமைகள்? குறிப்பாக கார் போன்ற வாகனங்களை பெருமழைக்காலங்களில் காப்பது எப்படி?
அதற்கு தீர்வளிக்கும் விதமாக அறிமுகமாகியுள்ளது 'வெள்ள பாதுகாப்பு கவர்'.

ஆங்கிலத்தில் ‘ஃபிளட் கார்டு' என்று குறிப்படும் இந்த சாதனம் மழைக்காலங்களில் கார்கள் பாதிப்பை சந்திக்காமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வாக அமைகிறது.

சிறிய டூஃபல் பேக் போல இருக்கும் இந்த பாதுகாப்பு கவரை, பெருமழைக்காலங்களில் காரின் மீது போர்த்தி விட்டால்போதும். பிறகு கீழே தொங்கும் கயிறுகளை இழுத்து காரின் மேற்புறத்தில் கட்டவேண்டும்.

அவ்வளவே போதுமானது. மழைக்காலங்களில் மழை நீர் அதிகரித்து உங்களது காரை மூழ்கடிக்கும் கதிக்கு வந்தால், இந்த ஃபிளட் கார்டு காரை மூழ்காமல் பாதுகாக்கும்.

அனைத்து வித கார்களுக்கும், எல்லாவித கார்களின் அளவு மற்றும் வடிவத்திற்கு தகுந்த மாறி ஃபிளட் கார்டு தயாரிக்கப்படுகிறது என்பது இதிலுள்ள கூடுதல் சிறப்பு.

ஃபிளட் கார்டு கவரை பயன்படுத்தும் வழிமுறைகள்
- முதலில் காரின் ஏட்டனாவை கழட்டவேண்டும். பிறகு வெளிப்புற கண்ணாடிகள் அனைத்தையும் மூடவேண்டும்.
- பிறகு ஒரு பெரிய டூஃபுல் பேக் போல இருக்கும் ஃபிளட் கார்டை ஒரு சமதளத்தில் பரப்பி, இருவர் உதவியுடன் அதிலுள்ள ஜிப்பை திறந்து தூக்கி பிடிக்க வேண்டும்.
- காரை இயக்கும் முன், டிரைவர் இருக்கை கண்ணாடியை கீழற்றக்கி, பிளட் கார்டுக்குள் காரை ஓட்டிசென்று நிறுத்தவேண்டும்.
- பிறகு நீங்கள் வெளியே வந்த உடன் உங்களது உதவியாளர்கள் ஜிப்பை முடிவிடுவார்கள். இப்போது கார் ஒரு பெரிய ஜிப் கொண்ட பையிற்குள் போடப்பட்ட பொருள்.
- பிறகு அந்த பையின் நான்கு முனைகளில் உள்ள பக்கிள் கொண்ட கயிறுகளை குறுக்கும் நெடுக்குமாக இழுத்து கட்டவேண்டும்.
- நீங்கள் காரை நிறுத்தும் பகுதியில் ஏதாவது உறுதியான தூண் இருந்தால், அதனுடன் ஃபிளட் கார்டில் உள்ள பெரிய கயிறு கட்டி பக்கிள் போடலாம்.


எளிய இந்த செயல்பாடுகள் மூலம், உங்களது கார் மழைக்காலங்களில் பாதுகாப்பாக இருக்கும். மழைநீரில் அடித்து செல்லாமலும், காருக்குள் தண்ணீர் போகாமலும் இந்த ஃபிளட் கார்டு பாதுகாக்கும்.
மிகவும் உறுதியான பிளாஸ்டிக் கொண்டு இந்த ஃபிளட் கார்டு உருவாக்கப்படுவதால், எளிதில் இது பாதிப்படையாது. மேலும், அதிக நாட்கள் வரக்கூடிய வகையில் இதனுடைய தயாரிப்பு பணியின் போதே ஃபிளட் கார்டு மீது சோதனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் ரூ.15,000/- ஆரம்ப விலையில் சிவிக், சிட்டி, ஆல்டீஸ், கேம்ரி போன்ற கார் செடானின் மாடலகளுக்கு கிடைக்கிறது.
டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டவர் போன்ற எஸ்.யூ.வி கார்களுக்கு இது ரூ.18,000 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

மழைக்காலங்களில் காருக்கான நிரந்தர பாதுகாப்பை வழங்க தயாரிக்கப்பட்டுள்ள ஃபிளட் கார்டு சாதனம் சென்னை, மும்பை போன்று பெருமழை பெய்யும் நகரங்களுக்கு சிறந்த வடிகாலாக அமையும்.


Click it and Unblock the Notifications








