ஹூண்டாய் கார்களை ஆன்லைனில் புக் செய்யும் புதிய வசதி அறிமுகம்..!
ஆன்லைனில் கார்களை புக் செய்யும் புதிய வசதியை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு இனி கார்களை ஆன்லைனியேலே புக் செய்து கொள்ளும் வசதியை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவை பொருத்த வரையில் சென்னையை தன் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

1996ஆம் ஆண்டு முதன் முதலாக சாண்ட்ரோ என்ற மாடலுடன் இந்திய கார் சந்தையில் நுழைந்த இந்நிறுவனம் தற்போது இந்தியாவின் இரண்டாவது கார் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

1996ஆம் ஆண்டு முதன் முதலாக சாண்ட்ரோ என்ற மாடலுடன் இந்திய கார் சந்தையில் நுழைந்த இந்நிறுவனம் தற்போது இந்தியாவின் இரண்டாவது கார் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

தற்போது இண்டெர்னெட் யுகமாக மாறியுள்ள சூழ்நிலையில் வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஆன்லைனில் கார் புக் செய்யும் வசதியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி இன்றுமுதல் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் கார் புக் செய்யும் வசதியை இந்நிறுவனம் அளிக்கிறது.

தற்போது வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் கார்களை, அருகாமையில் உள்ள ஷோரூம்களுக்கு செல்லாமலே ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம்.

தற்போது வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் கார்களை, அருகாமையில் உள்ள ஷோரூம்களுக்கு செல்லாமலே ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம்.

இந்த வசதியை ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளபக்கத்திலும், மொபைல் பக்கத்திலும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி மே-2 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஒய்.டி.கூ கூறுகையில் ஹூண்டாய் நிறுவனம் வாடிக்கையாளர்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றும்.

புதுமையை பறைசாற்றுகின்ற இந்நிறுவனம் கார் விற்பனையில் டிஜிடலைசேசனை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

இதன் மூலம் கார் வாங்குவது எளிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்கு இது வசதியை அளிக்கும் என்று மேலும் கூறினார்.

ஹூண்டாய் நிறுவனம் இயான், ஐ10, ஐ20, எலைட் ஐ20, எக்ஸ்செண்ட், ஐ20 ஆக்டிவ், வெர்னா, க்ரெட்டா, எலாண்ட்ரா, டக்சன், சாண்டா எஃப்ஈ ஆகிய மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








