இந்திய சந்தையில் அசுர பலத்தோடு மோதும் ஹூண்டாய்... விற்பனையில் புதிய மைல்கல்..!!
இந்தியாவில் கார் விற்பனையில் ஹூண்டாய் மைல்கல் சாதனை.
இந்தியாவில் கார் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியா நாட்டை சேர்ந்த ஹூண்டாய் ஹேட்ச்பேக், செடான் மற்றும் எஸ்யூவி போன்ற கார் விற்பனையில் இந்தியளவில் முன்னணியில் உள்ளது.

இந்தியாவில் ஹூண்டாய், இதுவரை 50 லட்சம் கார்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட வெர்னா காரையும் 50 லட்சம் அளவில் தயாரித்துள்ளது.

1998ம் ஆண்டில் இந்தியாவில் கால்பதித்த ஹூண்டாய், 2007 ஏப்ரலில் சுமார் 10 லட்சம் கார்களை தயாரித்தது. தற்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உற்பத்தியில் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஹூண்டாய் முன்னதாக 10 லட்சம் கார்களை தயாரிக்க 8 ஆண்டுகள் ஆனது. தொடர்ந்து 2010ல் ஹூண்டாய் 20 லட்சம் கார்களை தயாரித்தது.

தொடர்ந்து 2013ல் 30 லட்சம் கார்களும் அதை தொடர்ந்து 2015ல் 40 லட்சம் கார்களை இந்தியாவில் ஹூண்டாய் தயாரித்துள்ளது.

இந்தியாவில் 2017ல் மட்டும் 50 லட்சம் கார்களை தயாரித்துள்ள ஹூண்டாய், கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது.

கிரான்ட் ஐ10, ஐ20, வெர்னா மற்றும் கிரெட்டா எஸ்யூவி போன்ற மாடல்கள் ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்தியாவில் முன்னணி விற்பனையை அளித்து வருகின்றன.

பயணிகள் ரக வாகன விற்பனையில், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஹூண்டாய் இந்த மைல்கல் சாதனையை துரிதமாகவே படைத்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் புதிய மாடல் கார்களை வெளியிடுவது மட்டுமின்றி பல்வேறு ரக கார் விற்பனையிலும் ஹூண்டாய் கவனம் செலுத்தவுள்ளது.

அந்த வகையில் ஹூன்டாய் நிறுவனம் சப்-4 மீட்டர் அளவுள்ள எஸ்.யு.வி. ரக கார் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

ஹூண்டாய் கார்களுக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வரவேற்பு காரணமாக, அதனுடைய சர்வீஸ் மையங்கள் நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வருகின்றன.

தற்போது இந்தியா முழுவதும் 2200-க்கும் அதிகமான விற்பனை மையங்களை ஹூண்டாய் திறந்துள்ளது.
மேலும் இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் புதிய 442 சர்வீஸ் மையங்களை ஹூண்டாய் திறக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications








