சுதந்திர தினத்தில் ஒர் அறிமுகம்: இந்தியாவின் முதல் பையோ-பேருந்து கோவாவில் பயன்பாட்டிற்கு வந்தது
சுதந்திர தினத்தில் ஒர் அற்புத அறிமுகம்: இந்தியாவின் முதல் பையோ-பேருந்து கோவாவில் பயன்பாட்டிற்கு வந்தது..!!
71வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடிய சமயத்தில், கோவாவில் மிகவும் வாகனப் புகையால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முதல் விதை தூவப்பட்டு இருக்கிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக கோவாவில் இயற்கை எரிவாயு கொண்டு இயங்கும் முதல் பேருந்து மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட சோதனை முயற்சியாக வந்துள்ள இந்த இயற்கை எரிவாயு பேருந்தை ஸ்கானியா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

36பேர் உட்காரும் அளவில் இருக்கைகள் கொண்ட இந்த பேருந்தை அடில் ஷா மாளிகையில் இருந்து கோவாவின் ஆளுநர் மிருதுளா சின்ஹா கொடியசைத்து துவங்கி வைத்தார்.
Recommended Video


இயற்கை எரிவாயு மூலம் உருவாகும் எத்தனால் கொண்டு இந்த பேருந்தின் இயக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தில் இயங்கும் மூன்று பேருந்துகளை மொத்தமாக கோவா அரசு அறிமுகம் செய்துவைத்துள்ளது.

கோவாவின் போக்குவரத்து அமைப்பான கடம்பா போக்குவரத்து கழகத்தின் கீழ் இந்த பேருந்துகளின் இயக்கம் நிர்வாகிக்கப்படும்.

இறுதியான தீர்வு காணப்படும் மூன் இந்த பேருந்துகளை முதல் மூன்று மாதங்கள் சோதனை முயற்சியாக இயக்க கோவா அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2018 பிப்ரவரிக்குள் இயற்கை எரிவாயுவால் இயங்கும் 40 பேருந்துகளை கோவா அரசு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

சாலிகோவில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை சேகரிக்கும் மேலாண்மை மூலம் பேருந்துகளுக்கான இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படும்.

கார், பைக்குகளை விட கனரக வாகங்கள், பேருந்துகள் போன்ற ஊர்திகள் தான் நாட்டின் சுற்றுச்சுழலில் மாசுகளை அதிகளவில் உருவாக்குகின்றன.

கச்சா எண்ணெயின் தேவையால் தான் தற்போது உயிரனங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய அளவிற்கான ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.

இயற்கை எரிவாயு திறனால் பேருந்துகள் இயக்கப்படுவதற்கான முயற்சியை கோவா அரசு எடுத்திருப்பதன் மூலம், இந்தியளவில் இதே நிலைமை உருவாக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








