மின்சார வகானங்களுக்கான பிரத்யேக சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் நகரம் இதுதான்..!!
மின்சார வகானங்களுக்கான பிரத்யேக சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் நகரம் இதுதான்..!!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு (IOC) சொந்தமான நாட்டின் முதல் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் நாக்பூரில் திறக்கப்பட்டது.

ஐஓசி மற்றும் வாடகை கார் நிறுவனமான ஓலாவும் இணைந்து, நாட்டின் முதல் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை உருவாக்கியுள்ளன.

மஹாராஷ்டிராவின் நாக்பூரில் தான் பொது போக்குவரத்து தேவைக்கான மின்சார வாகனங்கள் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகமாயின.

மின்சார வாகனங்கள் அறிமுகமானதை தொடர்ந்து அதற்கான சார்ஜிங் நிலையங்களும் நாக்பூரில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டன. அதில் முதற்கட்டமாகத்தால் இந்த சார்ஜிங் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுபற்றி பேசிய ஐஓசி-யின் பொது மேலாளர் முரளி ஸ்ரீனிவாசன் "எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது.ஒரு சூழலியல் சார்ந்த முன்னேற்றம் மற்றும் முக்கிய வணிகத்திற்கு இது நல்ல தொடக்கம் தான். வரும் ஆண்டுகளில் இந்தியா இதில் கோலோச்சும்" என்று கூறினார்.

நாக்பூரில் ஓலா நாட்டின் முதன் மின்சார சார்ஜிங் நிலையத்தை அமைத்திருப்பது மகிழ்ச்சி. தற்போது இந்தியாவில் நிலவி வரும் காற்று மாசுவிற்கு மின்சார வாகன பயன்பாடு ஏற்றமாகத்தான் அமையும் என்றும் பேசினார் முரளி ஸ்ரீனிவாசன்.

மத்திய அரசின் திட்டங்களுள் ஒன்றான் நிதி அயோக் மூலம் இந்திய அரசு இதுவரை 135 மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நிறுவ திட்டங்களை நிறைவுசெய்துள்ளது.
Recommended Video


அவற்றில் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மட்டும் சுமார் 55 மின்சார சார்ஜிங் நிலையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஐஓசி-யின் மின்சார சார்ஜிங் நிலையங்கள் நாக்பூரில் அமைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் அதே சமயத்தில் மின்சார வாகன பயன்பாட்டை இந்தியளவில் அதிகரிக்க இன்னும் பல்வேறு கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன.

அதை உணர்ந்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆகியவை மத்திய அரசின் வழிக்காட்டுதலின் படி செயல்படவேண்டும் என கோரிக்கைகள் பலமாக தற்போது எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications








