Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாகன பேட்டரிகளை சார்ஜ் செய்யும் மின்சார சாலை: புதிய தொழில்நுட்பம்
மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பில் இஸ்ரேல் நாடு சாலையின் மூலம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்த தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
பெட்ரோல், டீசலை தொடர்ந்து வாகனங்களுக்கு மின்சாரத்தை ஆற்றலாக உருவாக்க இந்தியா உட்பட சீனா, தென் கொரியா என பல நாடுகள் முயன்று வருகிறது.
மின்சார கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை விட அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது தான் தற்போதைய நேரத்தில் சவாலான காரியம்.
மின்சார கார் உற்பத்தியில் இறங்குவதாக சமீபத்தில் அறிவித்த இஸ்ரேல் அரசு, அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க அந்நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் கைக்கோர்த்துள்ளது.
இந்த கூட்டணியின் மூலம் மின்சார வாகனங்கள் பயணத்தின் போதே சாலை மூலம் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும் தொழில்நுட்பத்தை, இஸ்ரேல் அரசு அந்நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கவுள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், சாலையில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும் முறையை முதலில் மின்சார பேருந்துகளை வைத்து சோதனை செய்து பார்க்கவுள்ளதாகவும் இஸ்ரேல் அரசு கூறியுள்ளது.
'எலெக்ட்ரோ ரோடு' என்ற பெயரில் இதற்கான திட்டப் பணிகளை தொடங்கியுள்ள அந்நாட்டின் சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம், சுமார் 12 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
முதலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில்
மின்சார சாலைக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து திட்டப் பணிகள் மேலும் விரிவுப்படுத்தப்படும்.
இதன்படி இஸ்ரேல் அரசு, சோதனை முடிந்த பிறகு நாட்டின் முதல் 'எலெக்ட்ரோ ரோடு' பயன்பாட்டை 11 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தனது எலியாட் நகரத்திலிருந்து ரமோன் விமான நிலையம் வரை கட்டமைக்கவுள்ளது.
தாமிரப் பட்டைகள் மற்றும் மின்சார காந்தங்களால் இஸ்ரேலின் 'எலெக்ட்ரோ ரோடு' திட்டம் உருவாக்கப்படவுள்ளது. சாலைகளில் பதிக்கப்படும் இவற்றின் மேல் மின்சார வாகனங்கள் செல்லும் போது, அதனுடைய பேட்டரிகள் தானாக சார்ஜ் செய்துகொள்ளும்.
இஸ்ரேலை தொடர்ந்து அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நகரங்களுக்கு இத்திடத்தை உருவாக்கி தர 'எலெக்ட்ரோ ரோடு' திட்டத்தின் தலைமை அதிகாரி ஓரன் எஸ்ஸர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் இத்திட்டம் வெற்றி அடைந்தால், எலெக்ட்ரோ ரோடு கட்டமைப்பை மற்ற நாடுகளும் நிச்சயம் மேற்கொள்ளும்.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!