Just In
- 8 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 48 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவிகள் திரும்ப அழைக்கப்படுகிறது!
ஜீப் காம்பஸ் எஸ்யூவிகள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட உள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
குறைபாடுடைய உதிரிபாகத்தை சரிசெய்து தருவதற்காக, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவிகளை ஃபியட் க்றைஸ்லர் குழுமம் திரும்ப அழைக்க இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த ஜூலை 31ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. எஸ்யூவி ரகத்தில் அதிகம் விரும்பப்படும் மாடலாகவும் விளங்குகிறது.
இந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் ஏர்பேக்கில் குறைபாடுடைய உதிரிபாகம் இருப்பதை ஜீப் நிறுவனம் கண்டறிந்தது. இதையடுத்து, ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் இருக்கும் குறைபாட்டை சரி செய்து தருவதற்காக, உலக அளவில் திரும்ப பெறுவதற்கு முடிவு ஜீப் நிறுவனம் முடிவு செய்தது.
அதன்படி, இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்ட 1,200 ஜீப் காம்பஸ் எஸ்யூவிகள் திரும்ப அழைக்கப்பட உள்ளன. கடந்த செப்டம்பர் 5ந் தேதி முதல் கடந்த 19ந் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவிகளில் இந்த பிரச்னை இருப்பது தெரிய வந்துள்ளது.
ஏர்பேக் அமைப்பை இறுக்கமாக மூடியிருக்கும் அமைப்பில் பொருத்தப்பட்டிருக்கும் நட்டுகள் அசெம்பிள் செய்யும்போது இறுக்கமாக இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த நட் இறுக்கமாக இல்லாமல் இருப்பதால், விபத்தில் ஏர்பேக் விரிவடையும்போது முன்வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனை சரிசெய்து தருவதற்காக இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையை தானாக முன்வந்து மேற்கொண்டுள்ளது ஜீப் நிறுவனம்.
இந்த பிரச்னை காரணமாக, இதுவரை எந்த விபத்து குறித்தோ அல்லது பயணிகள் காயம் குறித்த புகார்கள் எதுவும் வரவில்லை என்று ஜீப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபியட் க்றைஸ்லர் குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், பிரச்னையை சரிசெய்து தரும் வரை, முன்பக்க பயணிக்கான ஏர்பேக்கை அணைத்து வைக்குமாறு வாடிக்கையாளர்களை ஜீப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
அடுத்து வரும் வாரங்களில் இந்தியாவிலுள்ள ஜீப் நிறுவனத்தின் டீலர்கள் மூலமாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்னை சரி செய்து தரப்படும் என்றும், கட்டணமில்லாமல் இந்த பிரச்னையை சரிசெய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சந்தேகம் உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வாடிக்கையாளர்கள் டீலர்களை தொடர்பு கொண்டும், தங்களது எஸ்யூவியில் ஏர்பேக் பிரச்னை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.