இந்தியாவில் ஆடம்பர கார்களுக்கு ரூ.1 கோடி வரை விலை குறைப்பு செய்து வியக்க வைத்த மாநிலம்..!!
இந்தியாவில் ஆடம்பர கார்களுக்கு ரூ.1 கோடி வரை விலை குறைப்பு செய்து வியக்க வைத்த மாநிலம்..!!
ஆடம்பர கார்களுக்கான வாடிக்கையாளர்களை கவர இந்தியாவில் ஒரு மாநிலத்தில் மட்டும் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தில் ஆடம்பர கார்களின் விலை மாடல்களுக்கு ஏற்ப சுமார் ரூ.1 கோடி வரை குறைந்துள்ளது.

ஜூலை 1ம் தேதி இந்தியாவில் அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி நடைமுறையின் காரணமாக, ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபுள்யூ, பென்ஸ் உட்பட பல ஆடம்பர கார்களின் விலை குறைந்தன.

இந்நிலையில் ஆடம்பர கார்களுக்கான வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக, இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலம் புதிய விதிமுறையை அமல்படுத்தி உள்ளது.

அதன்படி முன்னர் இருந்த முறைப்படி எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து 20 சதவீதத்தை சாலை வரியாக வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.
தற்போது இதை மாற்றி, வாகனங்களுக்கான அதிகப்பட்ச சாலை வரியாக ரூ.20 லட்சம் என்பதை மட்டும் மஹாராஷ்ட்ரா அரசு உருவாக்கியுள்ளது.

இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து மஹாராஷ்ட்ராவில் இறக்குமதி ஆகும் லம்போர்கினி, ஃபெராரி, ரோல்ஸ் ராய்ஸ் போன்ற கார்களுக்கான சாலை வரி ரூ.20 லட்சம் வரை ஆகும்.

உதாரணத்திற்கு லம்போர்கினி அவெண்டேடர் ரோட்ஸ்டர் கார் எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ.5.64 கோடி விலையில் விற்கப்படுகிறது.
முன்னர் இருந்த வரி நடைமுறையின் படி, சாலை வரி 20 சதவீதம் மற்றும் நகர் சுங்க வரி 4.5 சதவீதம் கூடுதலாக வாடிக்கையாளர் மாநில அரசுக்கு கட்டவேண்டும்.

இதனால் எக்ஸ்-ஷோருமில் ரூ.5.64 கோடி மதிப்புப் பெற்ற லம்போர்கினி அவென்டெடார் ரோட்ஸ்டர் காருக்கு சாலை வரியாக ரூ.1.13 கோடி மற்றும் நகர சுங்க வரியாக ரூ.25.38 லட்சம் என்ற கணக்கில் வருகிறது.

தற்போது இவை அனைத்தும் களையப்பட்டு, புதிய வரி நடைமுறையின் கீழ் ரூ.20 லட்சம் மட்டும் சாலை வரியாக கட்டினால் போதும் என்ற நடைமுறையை மஹாராஷ்ட்ரா அரசு கொண்டு வந்துள்ளது.

சாலை வரி செலுத்துவதற்கான இந்த புதிய நடைமுறையின் கீழ், மஹாராஷ்ட்ராவில் கார்களை வாங்குவோர் பெருமளவு தங்களது பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

இந்த புதிய நடைமுறையால் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, அரசாங்கமும் சாலை வரி மூலம் லாபம் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை உயர்ந்த கார்களை வாங்குவோர் பலர் புதுச்சேரி, டையூ, டாமன் போன்ற யூனியன் பிரதேசங்களில் கார்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனால் மஹாராஷ்ட்ரா போக்குவரத்து துறைக்கு வரியை பெற வேண்டிய சூழல் இருந்தது. தற்போது இந்த அறிவிப்பின் காரணமாக மஹாராஷ்ட்ரா போக்குவரத்து துறை நல்ல லாபம் ஈட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ரா அரசின் சாலை வரிக்கான இந்த புதிய நடைமுறையால், ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் டிராப்ஹெட் கூப் கார் தொடங்கி ஃபெராரி எஃப் 12 பெர்லினெட்டா கார் வரை ரூ, 1.16 கோடி வரை விலை குறையலாம்.

தற்போது மஹாராஷ்ட்ரா அரசின் இந்த வரி அமலாக்கம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுமா என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








