Just In
- 43 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 54 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
எஸ்.யூ.விகளை தொடர்ந்து சூப்பர்கார் உற்பத்தியில் களமிறங்கும் மஹிந்திரா
எஸ்.யூ.வி வண்டிகளை மின்சாரத்தில் இயக்க திட்டமிட்டுள்ளது மஹிந்திரா, மேலும் சூப்பார் காரை தயாரிப்பிலும் மஹிந்திரா மும்முரமாக இறங்கியுள்ளது
மின்சாரத்தில் இயங்கும் கார்களை சந்தைப்படுத்தி அதில வெற்றி கண்ட நிறுவனம் மஹிந்திரா. அந்நிறுவனத்தின் தொடர் தயாரிப்புகளான e2o+, eSupro மற்றும் eVerito போன்று மின்சாரத்தில் இயங்கும் கார்கள் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, பயன்பாட்டாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன
தற்போது மஹிந்திராவின் மின்சாரத்தில் இயங்கும் இந்த மூன்று கார்களும், 48 வோல்ட் மற்றும் 72 வோல்ட் கொண்ட அளவில் இயங்கி வருகின்றன. இந்த மாடல்களை தொடர்ந்து கடந்தாண்டு நடைபெற்ற கார் கண்காட்சியில் மஹிந்திரா 380 வோல்ட் அளவில் இயங்கும் ஸ்போர்ட்ஸ் காரை காட்சிப்படுத்தியிருந்தது, தற்போது இதற்கான உற்பத்தியை அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது .
மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான எஸ்.யூ.வி வண்டிகளான Scorpio, XUV500 போன்ற கார்கள், லேசான ஹைபிரிட் அமைப்பில் தற்போது இயங்கி வருகிறது. 380வோல்ட் திறனில் இயங்கக்கூடிய வண்டிகளை மஹிந்திரா உருவாக்கினால், அவை Scorpio, XUV500 என பெரிய கார்களிலும் இடம்பெற வாய்பிருக்கிறது
மஹிந்திராவின் இந்த முயற்சி வெற்றியடைந்தால், மின்சாரத்தால் இனி பேருந்து, லார்கள் போன்ற கமர்ஷியல் வண்டிகளையும் இயக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளது, அதில் முதலவாதாக மஹிந்திராவும், இத்தாலி பின்னின்ஃபெர்னா நிறுவனமும் இணைந்து சூப்பர் காரை ஒன்றை இணைந்து தயாரிககவுள்ளது. அதிக செயல்திறனோடு உருவாக்கப்படவுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் காரின் வடிவமைப்பு குறித்த தகவல்களை ஏற்கனவே மஹிந்திரா வெளியிட்டுவிட்டது.
பின்னின்ஃபெர்னா நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா தயாரிக்க உள்ள இந்த காரின் புகைப்படங்கள் ஏற்கனவே ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அதனால் தற்போதே இந்த காருக்கு இந்தியா மற்றும் இத்தாலி நாடுகளில் ஒரு ஸ்டார் அந்தஸ்து கிடைத்துள்ளது.
இதைதொடர்ந்து ஃபார்மூலா சேம்பியன்ஷிஃப் விளையாட்டு போட்டியுலும் மஹிந்திரா களமிறங்குகிறது. அந்நிறுவனத்தின் சார்பில் 2 கார்கள் போட்டியில் பங்கெடுக்க உள்ளன, ஒன்று மஹிந்திராவின் சொந்த தயாரிப்பாகவும் மற்றொன்று தென் கொரியாவின் சசாங்கியாங் என்ற நிறுவனத்தின் கீழ் களமிறங்கும் காராக இருக்கும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
லம்போகர்னி காரின் ஃபெர்மாமேனேட் காரின் புகைப்படங்கள்