Just In
- 41 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 1 hr ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 2 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 3 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆல்டோ தொடங்கி எஸ்-கிராஸ் வரை விலை உயர்வு பெறும் மாருதி சுஸுகி கார்கள்... முழுத் தகவல்கள்..!!
ஆல்டோ தொடங்கி எஸ்-கிராஸ் வரை விலை உயர்வு பெறும் மாருதி சுஸுகி கார்கள்... முழுத் தகவல்கள்..!!
2018 ஜனவரி முதல் 2% விலை உயர்வில் கார்கள் இந்தியாவில் விற்பனையாகும் என மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வாகன உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. இதனால் கார்களின் விலை உயரும் என முன்பே எதிர்பார்க்கப்பட்டது.
Recommended Video
அதை கருத்தில் கொண்டு, மஹிந்திரா, டொயோட்டா, ஹோண்டா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே அவை தயாரித்து விற்பனை செய்யும் கார்களின் விலையை உயர்த்தி அறிவித்தன.
புதிய விலை பட்டியல் வரும் 2018 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள சூழலில், இந்த வரிசையில் இந்தியாவின் முதன்மை கார் மேக்கராக இருக்கும் மாருதி சுஸுகி நிறுவனமும் இணைந்துள்ளது.
கார் உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து வரும் காரணத்தினால், அதனை ஈடு செய்யும் பொருட்டு 2018 ஜனவரி 1 முதல் கார்களின் விலை உயர்த்தப்படும் என மாருதி சுஸுகி இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ரூ. 2.45 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனையாகும் ஆல்டோ காரில் இருந்து ரூ.11.29 லட்சம் விலை பெறும் எஸ்-கிராஸ் கார் வரை
அனைத்து ரக கார்களின் விலையில் 2018 ஜனவரி 1 முதல் 2% வரை உயர்வு இருக்கும் என மாருதி சுஸுகி இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அது வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், உற்பத்திக்கு வேண்டிய மூலபொருட்களின் விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு, கார்களுக்கான விலையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எரிபொருள் தேர்வுகளோடு இந்த விலை ஏற்றம் மாறுபட்டாலும், இந்தியாவில் ஜனவரி 1 முதல் விற்பனையாகும் மாருதி சுஸுகி கார்கள் அதிகப்பட்சமாக 2% வரை விலை உயர்வை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.