இந்தியாவில் தயாராகும் மாருதி சுசுகி-யின் புதிய கார்..! முழுத் தகவல்கள்..!!
இந்தியாவில் தயாராகும் மாருதி சுசுகி-யின் புதிய கார்..! முழுத் தகவல்கள்..!!
மாருதி சுசுகி அடுத்து இந்தியாவில் விற்பனை செய்யும் புதிய காரை உள்நாட்டிலேயே தயாரிக்கும் என அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி கென்னிச்சி அயூக்கவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்கனாமிக் டைம்ஸ் செய்தித்தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
இந்தியாவை சேர்ந்த பொறியாளர்கள் குழு மாருதி சுசுகியின் புதிய காரை இந்தியாவில் தயாரிக்கும் என கென்னிச்சி அயூக்கவா கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் மாருதி சுசுகி பயணிகள் ரக வாகன விற்பனையில் கோலோச்சி வருகிறது. அதனால் இந்த புதிய மாடலும் பயணிகள் காராக தயாராகிறது.

தற்போதைய காலத்தில் மாருதியின் தயாரிப்புகளில் பெரிய விற்பனை திறனை பெற்று தந்த மாடல் விட்டாரா பிரிஸ்ஸா.
Recommended Video


இதைப்பற்றி கருத்துக்கூறிய அயூக்குவா " காருக்கான பிளாட்ஃபார்ம் ஜப்பானில் தயாரானாலும், இந்தியாவில் உள்ள ஆய்வுக்குழுவினர் தான் காரை தயாரித்ததனர்" என்று கூறுகிறார்.

ரோஹ்டாக்கில் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை மாருதி சுசுகி நிறுவுகிறது. இது 2018 முதல் பயன்பாட்டிற்கு வரலாம்.

இந்த மையம் இந்தியாவில் மாருதி சுசுகியின் தயாரிப்புகளுக்கான சந்தையை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தும்.

மேலும் அடுத்த தலைமுறைக்கான ஆல்டோ மற்றும் வேகன் ஆர் கார்களை தயாரிக்கும் முனைப்பிலும் மாருதி இறங்கியுள்ளது.

ஜப்பானில் சுசுகி-யின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து ஆல்டோ மற்றும் வேகன் ஆர் காருக்கான தேவைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் எதிர்பார்ப்புகளை பெரியளவில் உருவாக்கியுள்ள சுசுகி-யின் ஸ்விஃப்ட் கார் ரெனால்ட் க்விட் காருக்கு போட்டியாக சந்தையில் களமிறங்கவுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான ஹேட்ச்பேக் காருக்கான தளத்தை ஆராய்ந்து தான் மாருதி சுசுகி தனது தயாரிப்புகளை களமிறக்கவுள்ளது.
இதற்கான முயற்சிகளில் மாருதி சுசுகி 2018ல் இறங்கினால், அதனுடைய புதிய தயாரிப்புகள் 2022ல் விற்பனைக்கு வந்துவிடும்.


Click it and Unblock the Notifications








