மத்திய அரசின் தயவை எதிர்பார்த்திருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்..!! இப்படியா நடக்கவேண்டும்..??
மத்திய அரசின் தயவை எதிர்பார்த்திருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்..!! இப்படியா நடக்கவேண்டும்..??
வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாறுதல்கள் இருக்கும் என்ற மத்திய அரசின் முடிவை மறுபரீசிலனை செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் மத்திய அமைச்சரவை, மத்திய மற்றும் பெரியளவிலான கார்களுக்கு ஜிஎஸ்டி-யின் கீழ் செஸ் வரி உயர்த்தும் அவசர சட்டத்திற்கு அனுமதி வழங்கியது.

இதன்மூலம் 2017 ஜிஎஸ்டி வரி வதிப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட வாகனங்களுக்கான செஸ் வரி 15% என நடைமுறையில் உள்ளது.

இதை அதிகப்பட்சமாக 25% வரை உயர்த்த கொண்டு வரப்பட்ட அவசரச்சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Recommended Video


புதிய செஸ் வரி ஜிஎஸ்டி-யில் அமலுக்கு வந்தால், அது இந்தியாவில் உள்ள பல்வேறு கார் விற்பனையை பாதிக்கும் என மெர்சிடிஸ் கருதுகிறது.

செஸ் வரி உயர்த்தும் அரசின் முடிவு குழப்பமளிப்பதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி-யை வைத்து பல்வேறு உற்பத்தி மற்றும்
தொழில் பெருக்கங்களை உருவாக்கி வருவதாக மெர்சிடிஸின் நிர்வாக இயக்குநர் ரோலன்ட் ஃபால்ஜர் கூறுகிறார்.

தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அவசர சட்டம் இயற்றப்பட்டால், எஸ்.யூ.வி மற்றும் ஆடம்பர கார் விற்பனை நிச்சயம் வீழ்ச்சி அடையும் என அதன் தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணுகின்றன.

இதனால் செஸ் தொடர்பான சட்டதிருத்தம் செய்ய அரசு கருதும்போது, எங்களுக்கு ஆதரவான கருத்தையும் கேட்கவேண்டும் என ரோலன்ட் ஃபால்ஜர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி-க்கு பிறகு இந்தியாவில் மெர்சிடிஸ் தயாரிப்புகளுக்கான விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அனைத்து ரக கார் மாடல்களிலும் மெர்சிடிஸின் தயாரிப்புகளை வாங்க பல இந்திய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதை இந்தியாவில் வளர்ச்சியாக பார்க்கும் அந்நிறுவனம், தற்போது மெர்சிடிஸில் சக்கைப்போடு போட்டு வரும் ஏ.எம்.ஜி-க்கான சீர்ஸ்களை வலுப்படுத்த பல்வேறு திட்டங்களையும் தீட்டி வருகிறது.

இதனால் ஏ.எம்.ஜி-க்கான மையக்கிளைகள் உள்ள நியூடெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, பூனே மற்றும் சென்னை போன்ற நகரங்களில் ஏ.எம்.ஜி கார்கள் விற்பனை தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது.

தரவுகளின் அடிப்படையில் 2016ல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மொத்தம் 13,231 கார்களை விற்பனை செய்துள்ளது.
அதேபோல 2017 ஜூன் வரை 7,171 கார்களை மெர்சிடிஸ் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

பூனே சக்கானில் உள்ள மெர்சிடிஸின் ஆலை 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.1000 கோடி முதலீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் மட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு 41 நகரங்களில் 89 டீலர்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications








