அபாரம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்: ஜூன் மாதத்தில் 40 சதவீத வளரிச்சியை பதிவு செய்தது..!!
அபாரம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்: ஜூன் மாதத்தில் 40 சதவீத வளரிச்சியை பதிவு செய்தது..!!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜிஎஸ்டி அமலாக்கப்படுவதற்கு முன்னதான ஜூன் இறுதி வரை இந்தாண்டின் அரையாண்டில் இந்தியாவில் 40 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்தாண்டின் ஜூன் மாதம் வரையிலான அரையாண்டு முடிவில் வாகனத்துறையில் நிறுவனங்கள் பெற்ற வர்த்தக கணக்கு விவரங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.

2017 இரண்டாவது காலாண்டில் 3521 எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்து, பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் 18 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

மேலும் 2017ம் ஆண்டின் அரையாண்டு நிலவரப்படி, மெர்சிடிஸ் பென்ஸின் விற்பனை திறன் இந்தியாவில் 8.7 சதவீத வளர்ச்சியை பெற்று அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டங்களில் அந்நிறுவனம் தனது தயாரிப்புகளில் மொத்தம் 7171 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் பெற்றுள்ள இந்த வளர்ச்சி சர்வதேச சந்தைக்கு ஏற்ற வகையில் உள்ளது. ஜூன் மாத நிலவரப்படி 1.14 மில்லியன் வாகனங்களை மெர்சிடிஸ் உலகளவில் விற்றுள்ளது.
இதன்மூலம் இந்தியா உட்பட சர்வதேச சந்தையோடு மெர்சிடிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி 1.14 சதவீதம் உள்ளது.

புதிய தலைமுறையில் வெளியான காம்பேக்ட் மாடல் கார்கள், செடான் மாடல்கள், எஸ்.யூ.வி மற்றும் ஏ.எம்.ஜி. தயாரிப்புகளில் உருவான விற்பனை திறன் மூலம் இந்த வளர்ச்சியை மெர்சிடிஸ் நிறுவனம் அடைந்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை மெர்சிடிஸ் நிறுவனத்தின் இ-கிளாஸ் செடான் என்ற ஒரு மாடல் கார் தான் உலகளவில் அதிக விற்பனையான ஆடம்பர கார் மாடலாக இருந்தது.

மேலும் இதே பட்டியலில், எஸ்.யூ.வி மாடல்களில் ஜிஎல்ஏ, ஜிஎல்சி, ஜிஎல்இ கார்கள் மெர்சிடிஸின் இந்த வளர்ச்சியில் 31 சதவீத பங்கை அளித்துள்ளன.

இதில் குறிப்பிடும்படியாக ஜிஎல்சி மாடல் கார் அதிக விற்பனை அளவை கடந்த அரையாண்டு வரை பதிவு செய்துள்ளது.
ஜிஎல்இ, ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்எஸ் மாடல்கள் கார்களும் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை அதிகளவில் விற்பனைய பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications