மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு; 30 லட்சம் டீசல் கார்களை திரும்பப் பெறுகிறது..!!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு; 30 லட்சம் டீசல் கார்களை திரும்பப் பெறுகிறது..!!
மெர்சிடிஸ் பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக அது விற்பனை செய்த கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

ஜெர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மெர்சிடிஸ் பென்ஸ் தயாரித்த டீசல் கார்கள் அதிகளவில் மாசு உமிழ்வை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் டெய்ம்லர் நிறுவனம் தயாரித்த கார்களும் பெரியளவில் மாசு குறைப்பாட்டை ஏற்படுத்துவதாக ஜெர்மனி அரசு பரபரப்பு புகாரை எழுப்பியது.

வோக்ஸ்வேகன், ஆடி நிறுவனங்களின் கார்களுக்கு பிறகு மெர்சிடிஸ், டெய்ம்லர் போன்ற நிறுவனங்கள் மாசு உமிழ்வு மோசடியில் சிக்கியது ஆட்டோமொபைல் வர்த்தக்கத்தில் பரபரப்பை கூட்டியது.

இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்த அனைத்து டீசல் மாடல் கார்களின் மாசு உமிழ்வை கட்டுப்படுத்த திரும்பப் பெற உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் டெய்ம்லர், நைட்ரஜன் ஆக்சைடு நச்சு வாயு வெளியேறுவதை குறைக்கும் நோக்கில் கார்களில் செயல்பாட்டை மாற்றியமைக்க உள்ளது.

ஆடம்பர டீசல் கார்களில் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மெர்சிடிஸ் மற்றும் டெய்ம்லர் நிறுவனங்களுக்கு குறைந்தது 220 மில்லியன் யூரோக்கள் ஆகும்.

இருந்தாலும் இதற்காக வாடிக்கையாளர்களிடம் எவ்வித பணமும் வசூலிக்கப்பட மாட்டாது என இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் டீசல் கார்கள் யூரோ 6 தரத்தில் இருக்க வேண்டும். இந்த விதியை மீறி கார்களை கட்டுமைத்து விற்பனை செய்துள்ளதால் தான் மெர்சிடிஸ் மற்றும் டெய்ம்லர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

30 லட்சம் கார்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறப்படவுள்ள நிலையில் அதனால் எத்தனை பேர் பாதிக்கப்படவுள்ளனர் என்ற தகவலை டெய்ம்லர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் வெளியிடவில்லை.

எனினும் நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி, ஜெர்மனில் மட்டும் 10 லட்சம் டீசல் கார்கள் மீது இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

ஜெர்மனியை தவிரித்து மற்ற ஐரோப்பிய நாடுகளில் சுமார் 20 லட்சம் டீசல் கார்களில் மாசு உமிழ்விற்கான பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளது.

சில ஊடகங்கள், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறது. காரணம், கடந்த 2016ல் லண்டனில் மட்டும் சுமார் 170,000 மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் டீசல் கார்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








