Just In
- 1 hr ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 2 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 2 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 4 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
Don't Miss!
- News Exclusive: நான் சாதி வெறியன் இல்லை.. அது பொய் வீடியோ! கொமதேக நாமக்கல் வேட்பாளர் சூரியமூர்த்தி பேட்டி
- Lifestyle புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Movies Baakiyalakshmi serial: செழியனை அடித்து துவைக்கும் ஜெனியின் அப்பா.. பொங்கியெழுந்த எழில்!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு; 30 லட்சம் டீசல் கார்களை திரும்பப் பெறுகிறது..!!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு; 30 லட்சம் டீசல் கார்களை திரும்பப் பெறுகிறது..!!
மெர்சிடிஸ் பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக அது விற்பனை செய்த கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
ஜெர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மெர்சிடிஸ் பென்ஸ் தயாரித்த டீசல் கார்கள் அதிகளவில் மாசு உமிழ்வை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் டெய்ம்லர் நிறுவனம் தயாரித்த கார்களும் பெரியளவில் மாசு குறைப்பாட்டை ஏற்படுத்துவதாக ஜெர்மனி அரசு பரபரப்பு புகாரை எழுப்பியது.
வோக்ஸ்வேகன், ஆடி நிறுவனங்களின் கார்களுக்கு பிறகு மெர்சிடிஸ், டெய்ம்லர் போன்ற நிறுவனங்கள் மாசு உமிழ்வு மோசடியில் சிக்கியது ஆட்டோமொபைல் வர்த்தக்கத்தில் பரபரப்பை கூட்டியது.
இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்த அனைத்து டீசல் மாடல் கார்களின் மாசு உமிழ்வை கட்டுப்படுத்த திரும்பப் பெற உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் டெய்ம்லர், நைட்ரஜன் ஆக்சைடு நச்சு வாயு வெளியேறுவதை குறைக்கும் நோக்கில் கார்களில் செயல்பாட்டை மாற்றியமைக்க உள்ளது.
ஆடம்பர டீசல் கார்களில் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மெர்சிடிஸ் மற்றும் டெய்ம்லர் நிறுவனங்களுக்கு குறைந்தது 220 மில்லியன் யூரோக்கள் ஆகும்.
இருந்தாலும் இதற்காக வாடிக்கையாளர்களிடம் எவ்வித பணமும் வசூலிக்கப்பட மாட்டாது என இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் டீசல் கார்கள் யூரோ 6 தரத்தில் இருக்க வேண்டும். இந்த விதியை மீறி கார்களை கட்டுமைத்து விற்பனை செய்துள்ளதால் தான் மெர்சிடிஸ் மற்றும் டெய்ம்லர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
30 லட்சம் கார்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறப்படவுள்ள நிலையில் அதனால் எத்தனை பேர் பாதிக்கப்படவுள்ளனர் என்ற தகவலை டெய்ம்லர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் வெளியிடவில்லை.
எனினும் நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி, ஜெர்மனில் மட்டும் 10 லட்சம் டீசல் கார்கள் மீது இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
ஜெர்மனியை தவிரித்து மற்ற ஐரோப்பிய நாடுகளில் சுமார் 20 லட்சம் டீசல் கார்களில் மாசு உமிழ்விற்கான பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளது.
சில ஊடகங்கள், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறது. காரணம், கடந்த 2016ல் லண்டனில் மட்டும் சுமார் 170,000 மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் டீசல் கார்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.