ஜிஎஸ்டி-யில் மாற்றம்: எஸ்யூவி மற்றும் ஆடம்பர கார்களுக்கான வரி விதிப்பு உயர்ந்தது..!!
ஜிஎஸ்டி-யில் மாற்றம்: எஸ்யூவி மற்றும் ஆடம்பர கார்களுக்கான வரி விதிப்பு உயர்ந்தது..!!
மத்திய அரசு அறிவிப்பின் படி செப்டம்பர் முதல் எஸ்.யூ.வி மற்றும் ஆடம்பர கார்களுக்கான செஸ் வரி 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்ந்தது.

ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட பிறகு மாற்றப்பட்டுள்ள இந்த வரி விகித்தத்தால் அடிப்படை வரி 28 சதவீதமாகவும்,
செஸ் வரி ஆடம்பர மற்றும் எஸ்.யூ.வி கார்களுக்கு 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ராம் நாத் கோவிந்த் 2017 ஜிஎஸ்டி சட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கியதை அடுத்து
Recommended Video


எஸ்.யூ.வி மற்றும் ஆடம்பர கார்களுக்கு இருந்த வந்த செஸ் வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதன்மூலம் இந்த ரக கார்கள் 15 சதவீதத்திலிருந்து இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெரிய மற்றும் ஆடம்பர கார்களுக்கு இருந்து வந்த 55 சதவீத வரி விதிப்பு, ஜிஎஸ்டி-க்கு பிறகு 43 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதனால், பல ஆடம்பர மற்றும் எஸ்.யூ.வி கார்கள் மாடல்களுக்கு ஏற்றவாறு லட்சங்கள் முதல் கோடிகள் வரை குறைந்திருந்தது.

இதனால் இந்தியாவில் எஸ்.யூ.வி மற்றும் ஆடம்பர கார்களுக்கு பெரியளவில் மார்கெட் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கூடவே மெர்சிடிஸ்,பிஎம்டபுள்யூ போன்ற ஆடம்பர கார்களும் நல்ல விற்பனை திறனை பெற்று இருந்தன.

ஆனால் இதற்கிடையில் எஸ்.யூ.வி மற்றும் ஆடம்பர கார்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பில்,செஸ் வரி உயர்த்தப்படுவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.

இதனால் பல ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்கள் பெரியளவிலான பாதிப்பை சந்திக்கும் என்று கருத்து தெரிவித்தன.

குறிப்பாக மெர்சிடிஸ் கடந்த ஆகஸ்டு மாத இறுதி வாரத்தில் மத்திய அரசு செஸ் வரி உயர்த்துவதப்படுவதை குறித்து பரீசிலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தது.

ஆனால் இதை எதையும் ஏற்காமல் அவசர சட்டம் இயற்றப்பட்டு தற்போது எஸ்.யூ.வி மற்றும் ஆடம்பர கார்களுக்கான புதிய செஸ் வரி செப்டம்பர் 2ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.


Click it and Unblock the Notifications








