Just In
- 1 hr ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 2 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 3 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 4 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance CHATGPT முதல் இந்திய ஊழியரை நியமித்தது.. யார் இந்த பிரக்யா மிஸ்ரா..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சென்னையில் விரைவில் மின்சார பஸ் சோதனை ஓட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
சென்னையில் விரைவில் மின்சார பஸ்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விரைவில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.
பெருநகரங்களில் வாகனப் புகையால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. இதனை தவிர்க்கும் விதத்தில் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை இயக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, பெங்களூர் நகரில் மின்சார பஸ் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், சென்னையிலும் மின்சார பஸ்களை சோதனை ஓட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
குரோம்பேட்டையில் நடந்த போக்குவரத்து ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," சோதனை அடிப்படையில் பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்களிடமிருந்து மாதிரி பஸ்களை வழங்குமாறு கோரி இருக்கிறோம். விரைவில் அந்த பஸ்களை பெற்று சோதனை முறையில் இயக்கி பார்க்கப்படும். பேட்டரியில் இயங்கும் பஸ்களை சென்னையில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் அசோக் லேலண்ட் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அதேபோன்று, ஜனவரியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.
இந்த பஸ் மாடல்கள் விரைவில் சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்திடம் சோதனை ஓட்டத்திற்காக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனைகள் வெற்றி பெற்றால் படிப்படியாக பேட்டரியில் இயங்கும் பஸ்கள் சென்னை மாநகர போக்குவரத்து துறையில் சேர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதன்மூலமாக, பொது போக்குவரத்து துறை வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு வெகுவாக தவிர்க்கப்படும். இந்த திட்டம் நிச்சயம் வரவேற்கப்படும் திட்டமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!