நிஸான் தயாரிக்கும் புதிய மின்சார காரை சார்ஜ் செய்ய சார்ஜிங் நிலையங்கள் தேவையில்லை..!!
நிஸான் தயாரிக்கும் புதிய மின்சார காரை சார்ஜ் செய்ய சார்ஜிங் நிலையங்கள் தேவையில்லை..!!
எரிவாயு ஆற்றல் மூலம் மின்சார திறனை உற்பத்தி செய்துகொள்ளும் இ-பவர் என்ற தொழில்நுட்பத்தால் இயங்கும் புதிய காரை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது நிஸான் இந்தியா.

2030-ம் ஆண்டிற்குள் மின்சார வாகன பயன்பாட்டை இந்தியாவிற்கு கொண்டு வரும் முனைப்பில் மத்திய அரசு செயலாற்றி வருகிறது.

இதை பயன்படுத்தி பல்வேறு கார் தயாரிப்பு நிறுவங்கள் இந்தியாவில் மின்சார பயன்பாடு பெற்ற வாகனங்களை களமிறக்க முயன்று வருகின்றன.

அந்த வகையில் மஹிந்திரா, மாருதி சுசுகி நிறுவனங்களை தொடர்ந்து, நிஸான் இந்தியா மின்சார ஆற்றல் கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
Recommended Video


அந்தவகையில் அந்நிறுவனம் தயாரிக்கும் புதிய மின்சார ஆற்றல் பெற்ற கார் நோட் இ-பவர் என்ற தொழில்நுட்பத்தால் இயங்கும் வகையில் தயாராகிறது.

ஹேட்ச்பேக் மாடலாக வெளிவரும் இந்த காரில் ஃபிக்ஸடு சார்ஜிங் தேர்வுகளோடு, 198சிசி திறன் பெற்ற பெட்ரோல் எஞ்சினை நிஸான் நிறுவனம் பொருத்துகிறது.

இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா செய்தித்தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இ-பவர் தொழில்நுட்பம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவகையில் இருக்கும் என்றும்,

இ-பவர் தொழில்நுட்பம் இந்தியர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை தரும் என்பதை நிஸான் ஆர்&டி குழுவினர் ஆராய்ந்துவருவதாக

நிஸானின் உலக சந்தை மற்றும் விற்பனை பிரிவு தலைவரான டேனியலே சிச்சில்லாய் தெரிவித்துள்ளதாக ஆட்டோ கார் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2016ல் நோட் இ-பவர் தொழில்நுட்பம் பெற்ற கார் மாடலை ஜப்பானில் நிஸான் நிறுவனம் வெளியிட்டது. பெட்ரோல் எஞ்சின் பெற்ற இந்த காருக்கு மின்சார ஆற்றலை சார்ஜிங் நிலையங்கள் இல்லாமல் சார்ஜ் செய்ய முடியும்.

மின்சார கார்களுக்கு வேண்டி இந்தியாவில் இன்னும் பெருமளவிலான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படாத நிலையில், அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிஸான் இந்தியா நோட் இ-பவர் கொண்ட காரை தயாரிக்கவுள்ளது.

ஜப்பானில் இந்த காருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதை கடந்த நிதியாண்டிலும் பார்க்க முடிந்தது.

அங்கு தொடர்ந்து நோட் இ-பவர் காருக்கு தொடர்ந்து குவியும் வரவேற்பை தொடர்ந்து நிஸான் இந்தியாவில் இக்காரை வெளியிடுகிறது.

இந்தியாவில் மின்சார கார் விற்பனை குறித்து நிஸான் நிறுவனம் பல்வேறு தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும், அதை லீஃப் மற்றும் நோட் இ-பவர் மாடல்கள் மூலமாக திறம்பட செய்ய உள்ளதாக டேனியலே சிச்சில்லாய் கூறியுள்ளார்.

மின்சார ஆற்றல் கொண்ட கார்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பு, அந்த தொழில்நுட்பமின்றி புதிய அணுகுமுறை கொண்ட நிஸான் இ-பவர் போன்ற கார்கள் வெளிவருவது பாராட்டத்தக்கது தான்.

பேட்டரிகளை சார்ஜிங் நிலையங்கள் கொண்டு தான் சார்ஜ் செய்யவேண்டும் என்ற நிலையில் இல்லாத மின்சார வாகனங்களும் வரவேற்கப்பட வேண்டிய தொழில்நுட்பம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications








