பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியில் மத்திய அரசின் நிலைபாடு இதுதான்: நிதின் கட்கரி அதிரடி..!!
பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியில் மத்திய அரசின் நிலைபாடு இதுதான்: நிதின் கட்கரி அதிரடி..!!
இந்தியாவில் மின்சார வாகனங்களுடன், பெட்ரோல் டீசல் வாகனங்களும் உற்பத்தி செய்யப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் வாகன பயன்பாட்டை, மின்சார ஆற்றலுக்கு மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஒரு கல்லூரி விழாவில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, ஆட்டோமொபைல் துறை மூலம் இந்தியா ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதியீட்டுவதாக தெரிவித்தார்.
Recommended Video


மேலும், தற்போதைய செயல்பாட்டில் உள்ள ஆட்டோமொபைல் துறை அதிக வேலைவாய்ப்பை கொண்ட துறை. இந்தியர்கள் உட்பட பலரின் வாழ்வாதாரம் இதில் அடங்கியுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் உற்பத்தி தொடரும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதாரத்திற்கான நோக்கத்திலும் மத்திய அரசு எந்தவித சமசரசத்தையும் செய்து கொள்ளாது என்றார்.

இந்தியா என்பது நிலக்கரி மற்றும் உபரியான ஆற்றலை கொண்டுள்ள நாடு. இதன் மூலம் உருவாக்கப்படும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மக்கள் ஆதிரிக்க வேண்டும்.

மின்சார வாகன தயாரிப்பு என்பது பெட்ரோல், டீசல் உற்பத்தியை விட மலிவானது. சுகாதாரம் மட்டுமில்லாமல், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் இது நன்மை தான்.

இந்த நிலைப்பாட்டால், மத்திய அரசு ஆட்டோமொபைல் துறைக்கு எதிராக செயல்படுகிறது என எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் கார்களை நிறுவனங்கள் தொடர்ந்து ஏற்றுமதி செய்யலாம்.

அதற்கு தடை விதிக்கும் முடிவில் மத்திய அரசுக்கு கிடையாது. மாறாக மக்களுக்கு எது நல்லதோ அதை செய்ய வேண்டிய கடமையும் அரசிற்கு உள்ளது.

சுகாதார நலன் பேன, மின்சார வாகன துறையை வளர்தெடுக்க இந்த அரசாங்கம் பாடுபடும். பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதை தவறாக கருதினாலும் பரவாயில்லை.

எது நல்லதோ அதை உடனே நாங்கள் செய்ய காத்திருக்கிறோம் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பேசினார்.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு ஏற்றவாறு, சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் மின்சார வாகன உற்பத்திக்கான வாகனக் கொள்கையை 100 சதவீதம் வரையறுத்து முடித்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் டெல்லியில் இது தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








