Just In
- 4 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 4 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 7 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 7 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தாஜ் மஹாலை சுற்றி பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு திடீர் தடை... காரணம் இதுதான்..!!
தாஜ் மஹால் அமைந்திருக்கும் பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள இயக்க தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

தாஜ் மாஹலை பாதுகாத்து வரும் குழுவின் பரிந்துரையின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மக்களவையில் கூறினார்.

மேலும் அவர், வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பனால், தாஜ் மஹாலின் பளிங்கு கற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதாக அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் குறிப்பிட்டார்.


தாஜ் மஹாலை சுற்றி இயங்கக்கூடிய இலகு ரக வாகனங்கள் பல, இயற்கை எரிவாயு ஆற்றலுக்கு மாற தாஜ் மஹாலை பாதுகாக்கும் குழு தீவிரமாக வலியுறுத்துகிறது.

அரசின் இந்த முடிவை மீறி தாஜ் மஹாலை சுற்றி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்கள் இயக்கப்பட்டால்,
துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, தவறை பொறுத்து அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.

வாகனப் புகை மற்றும் தூசு காரணமாக தாஜ் மஹாலின் பளிங்கு கற்கள் மஞ்சளாக மாறி வருவது பல ஆண்டுகளாக இருக்கும் ஒரு சுற்றுச்சூழல் பிரச்சனை.

அதற்கேற்றவாறான நடவடிக்கையை தாமதமாக எடுத்திருந்தாலும், இதை அரசு உற்றுநோக்க வைத்திருப்பது அனைவரும் பாராட்டக்கூடிய ஒன்று தான்.

எனினும், தாஜ் மஹாலை சுற்றி 500 மீட்டர் தொலைவில் டீசல் மற்றும் பெட்ரோல் ரக வாகனங்களுக்கான தடை என்பதை பெரியளவில் தீர்வை தராது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

இருந்தாலும், இதை முதல் முயற்சியாக வைத்து, உலகப் புகழ் பெற்ற கட்டிடமும், உலக அதிசயங்களில் முதன்மை பெற்றுதுமான தாஜ் மஹாலை காக்க இந்திய அரசு இறுதியாக நல்ல தீர்வை எடுக்கவேண்டும் என்பது தாஜ் மஹாலை நேசிக்கும் ஒவ்வொருவது கருத்தாக உள்ளது.