Just In
- 28 min ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 2 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 4 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பி.எஸ். 4 விதிமுறைகளின் எதிரொலி: வாகன விலை அதிரிப்பு
அதிரடியான விலை குறைப்பு நடவடிக்கையால் தற்போது பி.எஸ்.3 எஞ்சின் பொருத்தப்பட்ட பெரும்பாலான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, வாகனங்களின் விலை 6 முதல் 10 சதவிதம் வரை உயருகிறது. இதனால் 50 டன் வரையில் வணிக ரீதியான வாகனங்களின் விலை உயர்த்தப்படும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பி.எஸ். 3க்கான தடையை நீக்கக்கோரிய வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் மனுவில் ,
- 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள்
- 16,000 கார்கள்
- 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும்
- 96,000 வர்த்தக வாகனங்கள்
என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.
இந்தியாவில் சாதரணமாக ஒரு மாதத்தில் 60, 000 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பி.எஸ்.3 எஞ்சினுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இந்தியளவில் இரண்டு நாட்களில் சுமார் 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பி.எஸ். 3 மீதான தடை உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் பெரும்பாலான முன்னணி வாகன தயாரிப்பாளர்கள் ரூ. 5,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ. 30000 வரை சலுகைகளை வழங்கினர்.
ஒரு சில டீலர்கள் ஒரு மாடல் பைக் வாங்கினால், நவி மினி பைக் போன்ற கியர் இல்லாத வண்டிகள் இலவசம் என்று கூட அறிவித்தனர். இதன்காரணமாக கடந்த மார்ச் 30 மற்றும் 31ம் தேதிகளில் வாகன விற்பனை இந்தியாவில் அமோகமாக நடைபெற்றது.
மஹிந்திராவின் பெரும்பாலான தயாரிப்புகளுக்கு பிரச்சனை இல்லை என்று நினைத்திருந்த நிலையில், அந்நிறுவனத்தின் வெற்றிக்கரமான படைப்பாக இருக்கக்கூடிய போலரோ, ஸ்கார்பியோ மற்றும் தார் ஆகிய எஸ்.யூ.வி கார்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன.
மாடல்களுக்கு தகுந்தவாறு பி.எஸ். 3 எஞ்சின் பொருத்தப்பட்ட மஹிந்திராவின் பொலரோ எஸ்.யூ.வி கார் , அதிரடியான விலைக் குறைப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இன்னும் சில இடங்களில் இந்த காருக்கு தொடர்ந்து போட்டோபோட்டி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிலர் முறைகேடுகளில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ஒருவருக்கு விற்கப்பட்ட பொலரோ காரை மற்றவரிடம் ஆசைக்காட்டி, பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விடக்கூடிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆகையால் பொலரோ காரை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வண்டியின் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள்.
பொலரோ என்று மட்டுமில்லாமல், அனைத்து மோட்டார் வாகனங்களையும் விசாரித்து வாங்குவது தான் இந்த நேரத்தில் கைக்கொடுக்கும்.
பி.எஸ். 3 பொருதப்பட்ட வாகனங்கள் இந்தியளவில் ஏறக்குறையை அனைத்தும் விற்பனைசெய்யப்பட்டு விட்டதாக உறுதியான தகவல்கள் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துக்கொண்டுள்ளன. பண்டிகை காலங்களில் வரக்கூடிய சலுகைகளை விட கடந்த 2 நாட்களில் எதிர்பாராத சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டன.
மார்ச் மாதத்தின் இறுதி நாட்களில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை வரலாற்றிலேயே அதிரடியான சலுகைகள் அறிவித்து, வணிக வாகன விற்பனையில் புதிய சாதனை பதிவாகியுள்ளது.
பி.எஸ். 3 எஞ்சினுக்கான தடையை உச்சநீதி மன்றம் உறுதிசெய்த பிறகு, வாகன தயாரிப்பில் உள்ள பெருநிறுவனங்களின் விற்பனை விவரம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு