Just In
- 2 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 2 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 3 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 4 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரெட்புல் கோ கார்ட் ரேஸிங் பந்தயம் இந்தியாவில் அறிமுகம்: முழு விபரம்!
கார் பந்தய கனவுடன் காத்திருக்கும் இளம் வீரர்களை இனம் கண்டு ஊக்குவிக்கும் விதத்தில், கோ கார்ட் பந்தயத்தை ரெட்புல் நிறுவனம் நடத்துகிறது. இந்த போட்டிக்கான அறிமுக நிகழ்வு நேற்று மும்பையில் நடந்தது. இந்த
கடந்த வாரம் இந்தியாவில் கோ கார்ட் பந்தயத்தை துவங்க இருப்பதாக ரெட்புல் நிறுவனம் அறிவித்தது. அதன்படி, இந்த பந்தயத்தின் அறிமுக நிகழ்வு நேற்று மும்பையில் நடந்தது. இந்த பந்தயம் தொடர்பான விரிவான தகவல்களை தொடர்ந்து காணலாம்.
கார் பந்தயத்தில் ஆர்முடையவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், இந்த கோ கார்ட் பந்தயத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ரெட்புல் நிறுவனம். இந்த அறிமுக விழா நிகழ்ச்சியில், பிரபல கார் பந்தய வீராங்கனை மிரா எர்டா கலந்து கொண்டார்.
மும்பையின் லோயர் பரேல் பகுதியில் உள்ள ஸ்மாஷ் ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட் மையத்தில் இந்த விழா நடந்தது. இந்த போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெப்கேமரா மூலமாக புகைப்படத்தையும், சுய விபரங்களையும் பதிவு செய்து கொண்டு போட்டியில் பங்கு பெறலாம்.
பந்தய களத்தில் விரைவாக சுற்றுக்களை முடிப்பவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதத்தில் மும்பை மற்றும் குர்கானில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த போட்டியில் பங்குபெற்று மிக விரைவாக சுற்றுகளை நிறைவு செய்யும் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மற்றொரு தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்க வேண்டும். அதில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள், ரெட்புல் நடத்தும் தேசிய அளவிலான கோ கார்ட் பந்தயத்தில் பங்கு பெற தகுதியுடையவர்களாக தேர்வுசெய்யப்படுவர்.
இறுதிப் போட்டி பெங்களூரில் உள்ள மெகோ கார்டோபியா மையத்தில் நடைபெற இறுக்கிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர் அபுதாபியில் நடைபெற இருக்கும் ஃபார்முலா-1 கார் பந்தயத்தை நேரில் கண்டு களிப்பதற்கான வாய்ப்பை ரெட்புல் நிறுவனம் வழங்க இருக்கிறது.
கார் பந்தயத்தில் திறமையானவர்களை இனம் கண்டு ஊக்கப்படுத்தும் விதத்தில், இந்த கோ கார்ட் பந்தயத்தை ஊட்டச்சத்து பான நிறுவனமான ரெட்புல் நடத்துகிறது. இது நிச்சயமாக இளைய தலைமுறை பந்தய வீரர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று நம்பலாம்.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!