Just In
- 2 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 3 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 4 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 5 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Movies நடிகருடன் காதல்.. திருமணத்திற்கு முன்பே தெரிந்த உண்மை.. நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் விலை குறைந்தது; காரணம் என்ன?
ரோல்ஸ்-ராய்ஸ், பெண்ட்லி போன்ற ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் கார்களின் விலை இந்திய சந்தையில் ரூ. 20 லட்சத்திலிருந்து, ரூ. 1கோடி வரை குறைந்துள்ளது. இதற்கான காரணத்தை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகவுள்ளது, அங்குள்ள கார் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை மிகுவும் பாதித்துள்ளது. குறிப்பாக ரோல்ஸ்-ராய்ஸ், பெண்ட்லி, ஆஸ்டன் மார்டின், ரேன்ஞ் ரோவர் மற்றும் ஃபெராரி கார்களின் விலை இந்தியாவில் ரூ. 20லட்சத்திலிருந்து ரூ. 1கோடி வரை குறைந்துள்ளன.
பிரிட்டனின் வெளியேற்றத்தால் அந்த நாட்டுடைய பவுண்டு மதிப்பு குறைந்துள்ளது. இந்த தாக்கம் வெறும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமில்லாமல், இந்தியாவை வரையிலும் உணரப்படுகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் பவுண்டுடைய விலை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் இந்தியர்களும் இங்கிலாந்து தயாரிப்புகளை வாங்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இந்த சூழலால் ஹையரெண்டு கார்களை வாங்க இந்தியர்களும் வரிசையில் காத்திருக்கின்றனர்.
பவுண்டுடைய மதிப்பு குறைந்து காணப்படுவதால், இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் மலிவாகியுள்ளது. இதனாலேயே அங்கு உற்பத்தியாகும் கார்களின் விலையும் சந்தையில் குறைந்து காணப்படுகிறது.
பொதுவாக இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கார்களுக்கு பெரியளவிலான சந்தை இந்தியாவில் உள்ளன. கடந்தாண்டில் 2 கோடி மதிப்பாலன 200 உயர் ரக கார்களை இந்தியர்கள் வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டு தயாரிப்புகளுக்கு இந்தியாவில் பெரியளவிலான சந்தை இருப்பதை உணர்ந்த கார் நிறுவனங்கள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதை பயன்படுத்தி இந்திய சந்தைக்காக 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தங்களது தயாரிப்புகளுக்கு விலையை குறைத்துள்ளன.
உயர் ரக கார்களை தயாரிக்கும் நிறுவனங்களும் இந்த விலை குறைப்பு நடவடிக்கையால் இந்தியாவில், பெரியளவில் கார்கள் வியாபாரமாகும் எனவும் எதிர்பார்க்கின்றன.
பிரிட்டன் வெளியேற்றதால், ஃபெராரி, பெண்ட்லி போன்ற மற்ற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த கார் வியாபாரமும் ஏன் பாதிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம்.
ஐரோப்பிய ஒன்றியத்தை பொருத்தவரை, பிரிட்டன் தான் ராஜா. மற்ற நாடுகள் எல்லாம் அதனுடன் ஒப்பிடும்போது உலகளவில் செல்வாக்கை தக்கவைத்திருப்பதில் சிறிய சரிவில் தான் உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுயிருக்கும் இந்த மாற்றத்தால், பொருளாதாரமும் பெரியளவில் சரிந்துள்ளன. அதனாலேயே ஐரோப்பாவின் மற்ற நாடுகளின் பண மதிப்பிலும் சிறிய சரிவு காணப்படுகிறது.
ஆனால் பிரிட்டனுடைய பவுண்டுக்கான மதிப்புடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இத்தாலி, ஜெர்மன் நாடுகளுடைய பண மதிப்பு சிறியளவில் மட்டுமே குறைந்துள்ளன. இதை பயன்படுத்தியே அந்த நாடுகளை சேர்ந்த கார் நிறுவனங்களும், இந்தியா சந்தையை உற்று நோக்கி வருகின்றன.
பிரிட்டன் நாடு வெளியேறுவதன் பாதிப்பு தற்போது உணரப்பட்டு இருந்தாலும், இதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தை பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே உணர்ந்துவிட்டன. கடந்த மார்ச் மாதமே ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி ஆகிய நிறுவனங்கள் கார்களின் விலையை குறைத்துவிட்டன. மேலும், ரேன்ஞ் ரோவர் நிறுவனம் இந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தனது கார்களுக்கான புதிய விலை பட்டியலை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஜூலை மாதம் முதல் ஜி.எஸ்.டி வரி விதிப்பு (பொருட்கள் மற்றும் சேவை வரி) அமலாக்கப்படுகிறது. இதனால் அனைத்து பொருட்களுக்கான வரி நிலைகள் சமநிலையை அடையும். இதன்மூலம் கார் தயாரிப்பின் வளர்ச்சிக்கும், உற்பதிக்கும் இந்தியாவில் உகந்த சூழல் ஏற்படும் என்பது உயர் ரக கார்களின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும்உயர் ரக கார்களின் புதிய விலை பட்டியல்.
கார்கள் | முந்தைய விலை | புதிய விலை |
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் | ரூ. 1.35 கோடி | ரூ. 1.04 கோடி |
ரேஞ்ச் ரோவர் வோக் | ரூ. 1.97 கோடி | ரூ. 1.56 கோடி |
ஃபெராரி 488 | ரூ.3.9 கோடி | ரூ. 3.6 கோடி |
ரோல்ஸ்-ராய்ஸ் ஃபான்த்தம் | ரூ. 9 கோடி | ரூ. 7.8- 8.0 கோடி |
ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் | ரூ. 5.25 கோடி | ரூ.4.75 கோடி |
ஆஸ்டன் மார்டின் டிபி11 | ரூ.4.27 கோடி | ரூ. 4.06 கோடி |
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா