ஆயிரம் ரூபாய் மொபைல் போன் போதும் திருடுபோன காரை உடனே கண்டுபிடித்துவிடலாம்..!!
ஆயிரம் ரூபாய் மொபைல் போன் போதும் திருடுபோன காரை உடனே கண்டுபிடித்துவிடலாம்..!!
திருடு போன காரை உடனடியாக கண்டுபிடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது. இன்ஸ்யூரன்ஸ் இல்லாமலும், டிராக்கர் கருவியும் பொருத்த வசதி இல்லை என்பவர்களுக்கான செய்திதான் இது.

ரூ.1000க்கும் குறைவான அல்லது அடிப்படை மாடல் மொபைல் இருந்தாலும் போன் போதும். திருடு போன காரை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

குறைந்த பட்ஜெட் மொபைல்
நீண்ட நேரம் பேட்டரியை தாக்குப்பிடிக்கும் திறன் கொண்ட, குறைந்த அளவிலான மொபைல்போன் ஒன்றை வாங்கிக்கொள்ள வேண்டும்.

சிம் கார்டு
எங்கும் சென்றால் டவர் கிடைக்கும் சேவையை பெற்ற தொலைதொடர்பு நிறுவனத்தின் சிம் கார்டு ஒன்றையும் வாங்க வேண்டும். கையில் இருந்தால் கூட சரி தான்...
Recommended Video


சைலன்ட் மோடு
கையில் இருக்கும் மொபைல் போனை சைலன்ட் மோடில் வைப்பதோடு சரி, அதை வைப்ரேஷன் மோடிற்கு வைக்காமல் இருக்க வேண்டும் என்பது இங்கு மிக முக்கியம்.

உறை
இவற்றுடன் மொபைல்போனில் எங்கும் தூசி துகள் படாதவாறு, பிளாஸ்டிக் பேப்பர்களை கற்றிவிடுங்கள்.

சோதனை
பாதுகாப்பிற்கான அனைத்து வேலைகளையும் முடித்த பிறகு, மற்றொரு போனில் இருந்து அந்த போனுக்கு அழைத்து சரியாக இயங்குகிறதா என்று சோதித்து பாருங்கள்.

பாதுகாப்பான இடத்தில்...
அந்த மொபைல்போனை காருக்குள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்கள். அவ்வப்போது, பேட்டரி சார்ஜ் செய்ய எடுப்பதற்கு ஏதுவான இடத்தில் வைத்துவிடுங்கள். வாரத்திற்கு இருமுறையாவது பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டும்.

கண்டுபிடிப்பது எப்படி?
ஒருவேளை, கார் திருடு போனால், 100 என்ற அவசர எண்ணில் போலீசாரை தொடர்பு கொண்டு மொபைல்போன் விபரத்தை தெரிவித்தால்,

5 நிமிடங்களில் உங்களது காரில் வைக்கப்பட்டிருக்கும் மொபைல்போனின் ஐஎம்இஐ நம்பரை வைத்து கார் இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.


Click it and Unblock the Notifications








