Just In
- 2 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 4 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஸ்கோடா கரோக் எஸ்யூவியும் இந்தியா வருகிறது?
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியை தொடர்ந்து, கரோக் எஸ்யூவியையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பரிசீலித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு இத
எஸ்யூவி ரக கார்களை அறிமுகப்படுத்துவதில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் கோடியாக் என்ற பிரிமியம் ரக எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி மாடலானது, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.
இந்த எஸ்யூவியை தொடர்ந்து, அண்மையில் சர்வதேச அளவவில் அறிமுகம் செய்யப்பட்ட கரோக் எஸ்யூவியையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் பரிசீலித்து வருவதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி பிரிமியம் எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்பட இருக்கும் நிலையில், அதனை விட விலை குறைவான ஸ்கோடா எஸ்யூவி மாடலாக கரோக் எஸ்யூவி நிலைநிறுத்தப்படும். இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு அதிகாரி அசுதோஷ் தீக்ஷித்தும் தகவல் தெரிவித்துள்ளார். எனவே, கரோக் எஸ்யூவியும் இந்தியா வருவது குறித்து விரைவில் உறுதியான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம்தான் புத்தம் புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் உதிரிபாகங்களை இந்த எஸ்யூவி பங்கிட்டுக் கொண்டுள்ளது.
சர்வதேச அளவில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களிலும், 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் இந்த எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எஸ்யூவி 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. விலை உயர்ந்த வேரியண்ட்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும்.
Recommended Video
இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட ஸ்கோடா யெட்டி எஸ்யூவிக்கு பதிலாக இந்த புதிய கரோக் எஸ்யூவி நிலைநிறுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. வழக்கம்போல் ஸ்கோடா நிறுவனத்தின் நேர்த்தியான வடிவமைப்பு, வலுவான கட்டமைப்பு உள்ளிட்டவை இந்த மாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் அம்சங்களாக இருக்கும்.
அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஸ்கோடா யெட்டி எஸ்யூவியைவிட சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட மாடல்களுக்கு இது போட்டியாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு