21 ஆண்டுகளாக ஸ்கோடா நிறுவனத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கார் இது தான்..!!
21 ஆண்டுகளாக ஸ்கோடா நிறுவனத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் கார் இது தான்..!!
செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் துணை நிறுவனமாகும். இது உலகின் மதிப்பு வாய்ந்த ஒரு பிராண்டாகவும் விளங்கி வருகிறது.

1994ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த 122 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தனித்துவமான ஸ்டைலிங் கொண்ட ஸ்கோடா கார்களுக்கென பிரத்யேக ரசிகர் வட்டமும் இருந்து வருகிறது.

ஸ்கோடா நிறுவனம் கடந்த 1996 நவம்பரில் ஆக்டேவியா எஸ்யூவியை அறிமுகம் செய்தது. கடந்த 21 ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள ஆக்டேவியா தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஜூன் 27, 2017ல் ஸ்கோடா நிறுவனத்தின் தொழிற்சாலையில் 60 லட்சமாவது ஆக்டேவியா கார் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஸ்கோடா நிறுவனத்தின் முக்கிய மாடலாக ஆக்டேவியா விளங்குகிறது. உலகளவில் ஸ்கோடா நிறுவனத்தை தலைநிமிரச் செய்த பெருமை ஆக்டேவியாவை சேரும் என குறிப்பிட்டார்.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் ஐக்கியமான பின்னர் ஸ்கோடா நிறுவனம் மேம்படுத்திய முதல் புதிய கார், ஆக்டேவியா என்பது குறிப்பிடத்தக்கது.

1996ம் ஆண்டு முதலாக அதன் தனித்துவமான ஸ்டைலிங்கால் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்த்த ஆக்டேவியா, அப்போது முதலே அதன் செக்மெண்டில் சிறந்து விளங்குகிறது.

தற்போது புதிய தலைமுறை 2017 ஸ்கோடா உலக நாடுகளில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் விரைவில் இந்த கார் அறிமுகமாகவுள்ளது.

உலக அளவில் 21 ஆண்டுகளாக ஒரு கார் வெற்றிகரமான மாடலாக வலம்வருவது சாதாரணமானதல்ல, அதிலும் 60 லட்சம் என்ற எண்ணிக்கை மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








