ஸ்கோடா இந்தியாவிற்கு அடுத்த சிக்கல்... ரேபிட் மான்டே கார்லோ காருக்கு நீதிமன்றம் தடை..!!
ஸ்கோடாவிற்கு உருவான அடுத்த சிக்கல்... ரேபிட் மான்டே கார்லோ காருக்கு நீதிமன்றம் தடை..!!
இந்தியாவில் மான்டே கார்லோ பெயரை பயன்படுத்தி காரை விற்பனை செய்ய ஸ்கோடா இந்தியாவிற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாபின் லூதியானாவில் மான்டோ கார்லே என்ற பெயரில் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

அந்நிறுவனத்தின் டிரேட்மார்க்கான மான்டோ கார்லே என்ற பெயரை ஸ்கோடா முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக வழக்கு தொடரிருந்தது.

இதை விசாரித்த நீதிமன்றம் மான்டோ கார்லே என்ற பெயரில் ஸ்கோடா காரை விற்பனை செய்ய தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

ரேபிட் மாடலில் பண்டிகை காலத்திற்கான சிறப்பு பதிப்பாக மான்டோ கார்லே என்ற பெயரில் புதிய காரை கடந்த ஆகஸ்டில் வெளியிட்டது ஸ்கோடா இந்தியா.
Recommended Video


குறைந்த எண்ணிக்கையிலே தயாரிக்கப்படும் இந்த காருக்கான புக்கிங் தொடங்கப்பட்டு, சில வாடிக்கையாளர்கள் ரேபிட் மான்டோ கார்லே காரை வாங்கி ஓட்டவே தொடங்கிவிட்டனர்.

தற்போது இந்த வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக மான்டோ கார்லே பெயரில் ரேபிட் காரின் சிறப்பு பதிப்பை தயாரிக்க, விற்க மற்றும் விளம்பரப்படுத்த ஸ்கோடாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு ஆஃபர் அறிவிப்பது, மற்றவர்கள் அல்லது டீலர்களைக் கொண்டு நேரடியாக, மறைமுகமாக பொருள் மற்றும் வணிக முறையில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு ஆஃபர் அறிவிப்பது, மற்றவர்கள் அல்லது டீலர்கள் கொண்டு நேரடியாக, மறைமுகமாக பொருள் மற்றும் வணிக முறையில் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மான்டோ கார்லே பெயரில் இயங்கும் ஆடை நிறுவனத்திற்கு எந்தவொரு இடையூறையும் ஸ்கோடா 'மான்டோ கார்லே' பெயரின் மூலம் ஏற்படுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறுத்தி உத்தரவு பிறப்பித்த மாவட்ட கிளை நீதிமன்றத்தின் நீதிபதி முகேஷ் குமார்.
" ஸ்கோடா நிறுவனம் ரேபிட் காரில் புதிய வேரியண்டை 'மான்டோ கார்லே' என்ற பெயரில் வெளியிட்டு இருப்பது தெள்ளத்தெளிவாக இருக்கிறது"

"மேலும் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை காரின் மாடலாக பயன்படுத்தியதன் மூலம் ஸ்கோடா இந்தியா விதிமீறல் செய்திருக்கிறது"

"புகார் அளித்துள்ள மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அவரிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் மான்டே கார்லோ பெயரை ஸ்கோடா பயன்படுத்த தடை பிறக்கப்படுகிறது" என்று நீதிபதி கூறினார்.

இந்த ஒரு சூழ்நிலையை ஸ்கோடா எவ்வாறு அணுகவுள்ளது, என்பதில் தான் மொத்த இந்திய ஆட்டோ துறையும் எதிர்நோக்கியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் உரிய உத்தரவை வெளியிடும் வரை ரேபிட் மான்டே கார்லோ காருக்கான விற்பனை இந்தியாவில் நடைபெறாது என்பது மட்டும் உறுதி.

ஆனால் மான்டே கார்லோ காரை புக்கிங் செய்தவர்களுக்கு பணத்தை ஸ்கோடா இந்தியா திருப்பிக்கொடுக்குமா என்பது மிகவும் அரிது தான் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆடை அலங்கார நிறுவனம் போட்டுள்ள இந்த வழக்கை எல்லா வித சாதக, பாதகங்களோடு ஸ்கோடா அணுகும் என நாமும் நம்பலாம்.


Click it and Unblock the Notifications








