ரோல்ஸ்-ராய்ஸ் ஃபான்டம் கார் மீது முறிந்து விழுந்த மரம்; சர்வீஸ் செய்ய முடியாமல் கதறும் உரிமையாளர்..!
ரோல்ஸ்-ராய்ஸ் ஃபான்டம் கார் மீது முறிந்து விழுந்த மரம்; சர்வீஸ் செய்ய முடியாமல் கதறும் உரிமையாளர்..!
பல கோடி மதிப்புடைய ரோல்ஸ் ராயஸ் கார் மீது பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்த சம்பவம் இணையதளங்கில் வைராலி பரவி வருகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் தயாரித்த கார்களில் அந்நிறுவனத்திற்கு உலகளவில் பெயரும் புகழும் பெற்றுதந்த மாடல்களில் முதன்மையானது ஃபான்டம்.

இந்தியாவில் இந்த காரின் புழக்கம் சற்று அதிகம். நாம் நாட்டில் இருக்கும் பெரிய செல்வந்தர்கள், பிரபலங்களிடயே ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் கார் தான் பிரபலம்.

கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் மும்பையில் பெய்த கனமழையால், அந்நகரமே தத்தளித்தது. மழை நீர் தேங்கி, மரங்கள் முறிந்து விழுந்து என மும்பையே பெருமழையால் ஸ்தம்பித்து தான் போனது.

தற்போது சில வார இடைவேளைக்கு பிறகு மீண்டும் மும்பையில் கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. முதல் பெருமழையின் போது நடந்த ஒரு சம்பவம் இணையதளங்கில் தொடர் வைரலாகி வருகிறது.

முதல் மழை குறைய தருணத்தில் புயல் சற்று அதிகமாகவே இருந்தது, அப்போது ஒரு தனியார் கட்டிட பார்க்கிங்கின் ஒரு மரத்தின் அடியில் ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் கார் நின்றுகொண்டு இருந்தது.

காற்று சற்று பலமாக வீச தொடங்க, அப்போது அந்த மரத்தின் கிளை, ஃபான்டம் கார் மீது விழுந்தது. சற்று உயரமான மரம் என்பதால் கிளை பலமாகவே கார் மீது முறிந்து விழுந்திருந்தது.

இதனால் காரின் பின்முகதி முற்றிலும் சேதமடைந்தது, காரின் டிக்கி திறந்து, மீண்டும் முட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள், சிலர் உடனடியாக தங்களது கைப்பேசியில் அடிப்பட்ட ஃபான்டம் காரை புகைப்படம் எடுத்தனர்.

அதை இணையதளங்களில் பதிவிட்டனர். கொஞ்ச நேரத்திலேயே விபத்திற்குள்ளான ரோல்ஸ் ராய்ஸ் ஃபான்டம் காரின் புகைப்படங்கள் அனைத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகின.

ரோல்ஸ் ராய்ஸின் அதிக விற்பனை திறனை பெற்ற ஃபான்டம் கார் அதனுடைய வடிவமைப்புகளுக்கு ஏற்றவாறு ரு.4 கோடி முதல் ரூ.8 கோடி வரை மதிப்புப்பெறுகிறது.

விபத்திற்குள்ளான இந்த காரில் 6.8 லிட்டர் என்.ஏ வி12 பெட்ரோல் எஞ்சின் உள்ளது, இது அதிகப்பட்சம் 453 பிஎச்பி மற்றும் 720 என்.எம் டார்க் திறனை வழங்க வல்லது.

பின் சக்கரங்களுக்கு எஞ்சினின் ஆற்றலை கடத்தும் வகையில் இந்த காரில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மரம் முறிந்து விழுந்த ரோல்ஸ்-ராய்ஸ் ஃபாண்டம் கார், மும்பையில் பிரபல தொழிலதிபரான ராகேஷ் குமார் வத்வான் என்பவருக்கு சொந்தமானது என தற்போது தெரியவந்துள்ளது.

அவரது ஃபான்டம் கார் மீது மரம் முறிந்து விழுந்த சமயத்தில் தனது குடும்பத்தினரோடு மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றில் ராகேஷ் குமார் வத்வான், பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு சினிமா பார்த்துக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








