போலீசார் அதிரடி வேட்டை; திருடு போன 230 பைக்குகள் மீட்பு
5 மாதங்கள் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் திருடுபோன 230 பைக்குகள் மீட்கப்பட்டது. பைக்குகளை திருடிய 156 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்.
5 மாதங்கள் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் திருடுபோன 230 பைக்குகள் மீட்கப்பட்டது. பைக்குகளை திருடிய 156 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்.

வாகன திருட்டு என்பது இந்தியாவில் அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக பெரு நகரங்களில் இரவு நேரங்களில ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள், பல நேரங்களில் பகல் நேரங்களிலும் இவ்வாறான திருட்டு நடக்கிறது.

இந்தியா முழுவதும் இது போன்ற திருட்டுகள் அதிகமாக நடந்தாலும் மஹாராஷ்டிரா மாநிலம் தானே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பிவான்டி, அம்பேர்நாத், கல்யாண் ஆகிய பகுதிகளில் மிக அதிக அளவில் நடப்பதாக தெரிகிறது.

இது குறித்து கடந்த சில மாதங்களாக அதிக அளவில் புகார்கள் போலீசாருக்கு வந்த வண்ணம் இருந்தன. இதை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பெரிய அளவில் பலன் தெரியவில்லை. தொடர்ந்து திருட்டு நடந்து கொண்டே தான் இருந்தது.

இந்நிலையில் தானே மாநகர போலீஸ் கமிஷனர் விவேக் பான்சல்கர் கடந்த ஜூன் மாதம் போலீசாருக்கு திருடு போன பைக்குளை பிடிக்க அதிரடி சோதனைகள் உள்ளிட்ட சில ரகசிய நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டார்.

சுமார் 5 மாதங்கள் நடந்த இந்த ஆபரேஷன் தற்போது முடிவுக்கு வந்தது. இந்த ஆபரேஷனில் திருடு போயிருந்த சுமார் 230 பைக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பைக் திருட்டில் ஈடுபட்டதாக சுமார் 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருடப்படும் பைக்குகளுக்கு போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மார்கெட் விலையில் இருந்து 30 சதவீத விலையில் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு விற்பனை செய்யப்படும் வாகனங்கள் வேறு பகுதியிலோ அல்லது வேறு மாநிலங்களிலோ தான் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது போலீசார் சார்பில் www.vahanchoritakrar.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தொலைந்து போன வாகனங்களின் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற நடைமுறையை தான் பெங்களூரு மற்றும் டில்லி போலீசாரும் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications