ஓட்டுனர் உரிமம் பெற வயது சான்றாக ஆதார் சமர்ப்பிக்கும் முறை அறிமுகம்!
ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
போக்குவரத்து துறையில் ஓட்டுனர் உரிமம், புதுப்பித்தல் ம ற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கு ஒரே விண்ணப்ப படிவம் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பழகுனர் உரிமம், புதிய ஓட்டுனர் உரிமம், புதுப்பித்தல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கு இதுவரை தனித்தனி படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," , ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஆதார் அட்டையை வயது சான்றாக சமர்ப்பிக்கும் முறை சேர்க்கப்பட்டு இருக்கிறது.

மேலும், பழகுனர் உரிமம், புதிய ஓட்டுனர் உரிமம், உரிமத்தில் முகவரி மாற்றம் உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றிருக்கும் வெவ்வேறு படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

னி மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் படிவம் 2ஐ பூர்த்தி செய்யும் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது.

இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய நடைமுறை மூலமாக ஓட்டுனர் உரிமம் பெறுவது மற்றும் புதுப்பித்தல் பணிகள் எளிமையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெவ்வேறு படிவங்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் குழப்பங்கள் தவிர்க்கப்படும். மேலும், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான நடைமுறை எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








