காரை விற்றுவிட்டு ஆவணத்தில் பெயர் மாற்றாவிட்டால் இவருக்கு நடந்த கதி தான் உங்களுக்கும்; உஷார்..!!
காரை விற்றுவிட்டு ஆவணத்தில் பெயர் மாற்றாவிட்டால் இவருக்கு நடந்த கதி தான் உங்களுக்கும்; உஷார்..!!
காரை விற்பனை செய்துவிட்டு அதற்குரிய ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யாவிட்டால், குறிப்பிட்ட காரால் விபத்து உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கும் போது அதற்கு காரை விற்றவர் தான் பொறுப்பேற்க நேரிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் வசித்து வரும் விஜயகுமார் என்பவர் 2007ம் ஆண்டில் தன்னிடமிருந்த ஒரு காரை மற்றவருக்கு விற்றுள்ளார். ஆனால் அதற்கான ஆவணங்களில் விஜயகுமார் பெயர் மாற்றம் செய்யவில்லை.
Note: Images are representative purpose only

விஜயகுமாரிடமிருந்து கார் வாங்கியவர், அதை மற்ற ஒருவருக்கு விற்பனை செய்தார். மூன்றாம் நபருக்கு கார் கைமாறிய போதும் முதல் உரிமையாளர் விஜயகுமார் பெயரிலான ஆவணங்கள் மாற்றம் செய்யப்படவில்லை.
Note: Images are representative purpose only

இந்நிலையில் ஓட்டுநர் ஒருவர் காரை சாலையில் ஓட்டிச்சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சாலை பயணி ஒருவர் உயிரிழந்தார்.
உயிரழந்தவரின் குடும்பத்தினர், விபத்திற்கு உரிய இழப்பீடு பெற 'மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில்' வழக்கு தொடர்ந்தனர்.
Note: Images are representative purpose only

இரு தரப்பு புகார்களையும் விசாரித்த தீர்பாயம், விசாரணையை முடித்துக்கொண்டு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த உயிரழந்தவரின் குடும்பாத்தாருக்கு சாதகாமாக தீர்ப்பு கூறியது.
Note: Images are representative purpose only

அதில், 2007ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட கார், மூன்றாம் நபருக்கு கைமாறிய நிலையிலும் அது தொடர்ந்து விஜயகுமார் பெயரிலேயே இருந்து வருகிறது.
Note: Images are representative purpose only

இதனால் அந்த கார் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ.3.85 லட்சம் இழப்பீட்டு தொகையை விஜயகுமார் தான் வழங்க வேண்டும் என தீர்ப்பில் தீர்பாயம் குறிப்பிட்டு இருந்தது.
Note: Images are representative purpose on

இந்த தீர்ப்பை எதிர்த்து காரை வாங்கிய முதல் உரிமையாளர் விஜயகுமார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கில் தற்போது உச்சநீதிமன்றம் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அப்படியே உறுதி செய்துள்ளது.
Note: Images are representative purpose only

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காரை விற்பவர் அதற்குரிய ஆவணங்களில் விற்பவரின் பெயருக்கு மாற்றம் செய்யவில்லை என்றால்,
Note: Images are representative purpose only

விற்கப்பட்ட காரால் விபத்து உள்ளிட்ட எந்த பிரச்சனை நடந்தாலும் அதற்கு ஆவணங்களில் உள்ள உரிமையாளரே பொறுப்பேற்க நேரிடும் என்று உத்தரவிட்டனர்.
Note: Images are representative purpose only

இனி கார் விற்பவர்கள் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து செயல்படுவது நல்லது. மோட்டார் வாகன சட்டமும் இதையே தான் வலியுறுத்துகிறது. இன்றைய காலக்கட்டத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கக்கூடிய நபரும், விற்கக்கூடிய நபரும் உரிய முறையில் விதிகளை பின்பற்றவது தனிப்பட்ட அளவிலும் நடக்கக்கூடிய பாதிப்பை தடுக்கும்.


Click it and Unblock the Notifications