Just In
- 31 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 6 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Lifestyle குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
குழந்தையின் உயிரை காப்பாற்ற 350 கிலோ மீட்டரை 250 நிமிடத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்..!
திருச்சி கேகே நகரை சேர்ந்த குணசீலன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு நேற்று முன் தினம் காலை 11 மணிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை பிறந்த சில மணி நேரத்தில், அந்த குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை
திருச்சி கேகே நகரை சேர்ந்த குணசீலன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு நேற்று முன் தினம் காலை 11 மணிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தை பிறந்த சில மணி நேரத்தில், அந்த குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை ஒன்று இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.
உடனடியாக பரபரப்பாகிய மருத்துவமனை டாக்டர்கள் அந்த குழந்தைக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதில் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது உறுதியானது. இதற்காக அறுவை சிக்ச்சைதான் செய்ய வேண்டிய நிலை இருந்தது.
குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போகும் என்று டாக்டர்கள் கண்டறிந்தனர். ஆனால் இதயத்தில் ஓட்டைக்கு அறுவை சிகிச்சை செய்ய திருச்சியில் எந்த மருத்துவமனையிலும் வசதியில்லை.
சென்னை அப்பல்லோ மருத்துமவமனையில் அந்த வசதி இருப்பது கண்டறிப்பட்டு இந்த தகவல்கள் குழந்தையின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் துடிதுடித்து போன பெற்றோர் குழந்தையை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க மருத்துவமனைக்கு அனுமதி வழங்கினர்.
இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையை தொடர்பு கொண்டு குழந்தையின் நிலையை புரிய வைத்த டாக்டர்கள் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டு கொண்டனர். சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் அறுவை சிகிச்சைக்காக ஒப்புக்கொண்டு குழந்தையை சென்னைக்கு கொண்டு வரும் பணியை துவங்க சொன்னார்கள்.
தற்போது குழந்தையை உடனடியாக முடிந்த அளவிற்கு விரைவாக சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டும். குழந்தை தற்போது இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளது. இன்குபேட்டருடன் விமானத்தில் குழந்தையை எடுத்து செல்வது என்பது இயலாத காரியம். எனவே காரில் ரோடு வழியாக மட்டுமே குழந்தையை கொண்டு செல்ல முடியும்.
விமானம் பறக்கும் போது இன்குபேட்டர் வேலை செய்யாமல் போகலாம். இதனால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இருக்கும் ஒரே வழியான ரோட்டின் மூலமே சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை கொண்டு செல்ல வேண்டும். இதுவே மருத்துவமனைக்கு இருந்த பெரும் சவால் .
இந்த தகவல் ஜிஎன்ஆர் ஆம்புலன்ஸ் குழுவிற்கு சென்றது. அவர்கள் குழந்தையை முடிந்த அளவிற்கு பத்திரமாகவும் வேகமாகவும் கொண்டு செல்ல முன் வந்தனர்.
காலை 11 மணிக்கு குழந்தை பிறந்த நிலையில் இவை எல்லாம் நடந்து குழந்தையை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர மாலை 4 ஆகிவிட்டது. உடனடியாக குழந்தை ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு திருச்சி அமெரிக்கன் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் சரியாக 4 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டது.
அமெரிக்கன் மருத்துவமனையில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சுமார் 350 கி.மீ. இந்த தூரத்தை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மிக வேகமாகவும் அதே நேரத்தில் வேகத்தால் குழந்தைக்கு எந்த வித பாதிப்பு ஏற்படாமலும் கடக்க வேண்டும்.
திருச்சியில் இருந்து சென்னையை கடக்கும் போது ஆம்புலன்ஸ் சுமார் 80-100 கி.மீ வேகத்தை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். எந்த இடத்திலும் 80 கி.மீ. வேகத்தில் இருந்து குறையகூடாது. அவ்வாறு குறைந்தால் குழந்தையை சென்னைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடும்.
இதற்கிடையில் சென்னை - திருச்சி இடையே டிராபிக் அதிகமாக இருக்கும் பகுதிகள் வேறு இருக்கிறது. டிராபிக் இல்லாத பகுதிகளை ஆம்புலன்ஸ் சுலபமாக 80 கி.மீ.க்கு அதிகமான வேகத்தில் கடந்து விடும். ஆனால் டிராபிக் உள்ள வழிகளில் இது கடினம். டிராபிக் உள்ள இடங்களில் வேகம் குறைய கூடாது. இதற்காக விழுப்புரம் மற்றும் செங்கற்பட்டு போலீசாரிடம் உதவி கேட்கப்பட்டது.
அவர்கள் முடிந்த அளவிற்கு டிராபிக்கான பகுதிகளில் ஆம்புலன்ஸ் வரும் போது ஆம்புலன்ஸிற்கு வழி கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதற்குள் இந்த தகவல் மற்ற ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சென்றதும் அவர்கள் இணைந்து ஒன்றாக ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கினர்.
இந்த குழுவின் மூலம் ஆம்புலன்ஸின் வைவ் லொக்கேஷன் பகிரப்பட்டது. இதன் மூலம் ஆம்புலன்ஸ் வரும் இடம் மற்றவர்களுக்கு எளிதாக தெரியும்படி அமைக்கப்பட்டது.
இதற்கிடையில் மற்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஒரு முயற்சியை செய்ய துவங்கினர். பொதுவாக ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்துடன் சென்றால் மக்கள் விலகிவிடுவர். ஒரு ஆம்புலன்ஸிற்கே இவ்வளவு என்றால் 3-4 ஆம்புலன்ஸ் ஒரே நேரத்தில் முழு சைரன் சத்தத்துடன் சென்றால் மக்கள் கவனம் ஆம்புலன்ஸ் பக்கம் திரும்பும். உடனடியாக ஆம்புலன்ஸ் செல்லவும் வழி கிடைக்கும் என திட்டமிட்டனர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் வரும் பகுதிக்கு முன்னரே மற்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சென்று எந்த இடத்தில் டிராபிக் இருக்கிறது என பார்த்து விட்டு வந்தனர். டிராபிக் இருக்கும் பகுதிகளை குறிப்பிடப்பட்டு அந்த தகவல் மற்ற ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பகிரப்பட்டது.
இதையடுத்து மற்ற டிரைவர்கள் குறிப்பிட்ட குழந்தையை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் டிராபிக் அதிகமாக இருக்கும் பகுதியை கடக்கும் போது இவர்களும் அந்த ஆம்புலன்ஸ் உடன் இணந்து வெறும் ஆம்புலன்ஸாக சைரனை மட்டும் ஒலிக்கவிட்டு சென்றனர்.
இதனால் மக்கள் 3-4 ஆம்புலன்ஸ் ஒரே நேரத்தில் அதிக சைரன் சத்ததுடன் கேட்டதால் வழியை ஏற்படுத்தி ஆம்புலன்ஸ் வேகம் குறையாமல் செல்வதற்கு உதவினர். குழந்தையை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் டிராபிக்கான பகுதியை கடந்த பின்பு வெறும் ஆம்புலன்ஸ்கள் நின்று விட்டன. குழந்தையை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மட்டும் வேகம் குறையாமல் தொடர்ந்து சென்றது.
அடுத்த டிராபிக்கான பகுதி வரும் போது இதே போல அடுத்த சில ஆம்புலன்ஸ்கள் செய்தன. இது போல் ஒவ்வொரு டிராபிக்கான பகுதியிலும் குழந்தையை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் நிற்காமல் மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து கொண்டே இருந்தது. இது குறித்த தகவல் எல்லாம் தொடர்ந்து வாட்ஸ் அப் குழுவில் தொடர்ந்து பகிரப்பட்டு வந்தது.
இவ்வாறு குழந்தையை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸிற்கு திருச்சி முதல் சென்னை வரை சுமார் 25 ஆம்புலன்ஸ்கள் உதவி செய்தன. மாலை சுமார் 4 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் சுமார் 4 மணி நேரம் 10 நிமிடம் அதாவது 250 நிமிடங்களில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையை அடைந்தது.
இந்த பயணம் என்பது ஆம்புலன்ஸ் சராசரியாக 89 கி.மீ. வேகத்தில் பயணித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட 80 - 100 கி.மீ வேகத்தை இந்த ஆம்புலன்ஸ் எட்டியதால் உரிய நேரத்தில் மருத்துவமனையை அடைந்தது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்ததால் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி அதிவேகத்தில் ஆம்புலன்ஸை இயக்கி அதே நேரத்தில் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சென்னை வந்து சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவரையும், அவருக்கு டிராபிக்கை கடக்க உதவிய ஆம்புலன்ஸ் டிரைவர்களையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!