Just In
- 46 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெட்ரோல் விலை குறைப்பின் 'கெத்தான' பின்னணி.. இந்தியாவின் அதிரடியால் வாலை சுருட்டி கொண்ட அமெரிக்கா
இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் அமெரிக்காவை இந்தியா அலற விட்ட 'கெத்தான' தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் அமெரிக்காவை இந்தியா அலற விட்ட 'கெத்தான' தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஈரான் நாட்டு அரசுடன் செய்து கொண்டிருந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து மே மாதம் அமெரிக்கா விலகியது. இதனால் ஈரான் அரசுக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்து கொள்ள வேண்டும் என உலக நாடுகளுக்கு அமெரிக்கா பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. இதனை மீறும் நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை செய்தது.
முழுக்க முழுக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு நாடு ஈரான். ஆனால் கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து ஈரானை தனிமைப்படுத்தி விட வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா இவ்வாறு உலக நாடுகளை மிரட்டியது.
முன்னதாக இந்த விவகாரத்தில் கெடு ஒன்றை அமெரிக்கா விதித்திருந்தது. கடந்த நவம்பர் 4ம் தேதிதான் அந்த கெடு. அதாவது நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு ஈரானில் இருந்து எந்த ஒரு நாடும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியது.
ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனெனில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால், உலகின் பல்வேறு நாடுகளும் வெகுவாக பாதிக்கப்படும்.
எனவேதான் டொனால்டு ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. முன்னதாக நவம்பர் 4ம் தேதி நெருங்க நெருங்க பெரும் பரபரப்பு தொற்றி கொண்டிருந்தது. இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் திருப்பம் ஒன்று அரங்கேறியது.
அதாவது ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்ற தனது எச்சரிக்கையில் இருந்து, இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, துருக்கி, கிரீஸ் மற்றும் தைவான் ஆகிய 8 நாடுகளுக்கு அமெரிக்கா திடீரென அடுத்த விலக்கு அளித்தது.
என்றாலும் மேற்கண்ட 8 நாடுகளுக்கும் தற்காலிகமாக மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது என அமெரிக்கா தெரிவித்தது. அதாவது அடுத்த 6 மாதங்களுக்கு இந்த விலக்கு பொருந்தும். அதற்குள்ளாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என அமெரிக்கா கூறியது.
எனவே இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மிகவும் அதிப்படியான விலையில் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
இந்த சூழலில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை தற்போது இருப்பதை காட்டிலும் இன்னும் அதிகமாக உயர்ந்து விடக்கூடிய அபாயம் நிலவி வந்தது.
எனவேதான் இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது இந்தியா.
கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஈரானில் இருந்து மொத்தம் 2.57 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 1.89 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை மட்டுமே ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்திருந்தது.
Recommended Video
அதாவது 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, சுமார் 36 சதவீதம் என்கிற அளவிற்கு இந்தியா அதிகரித்துள்ளது.
பணத்தின் அடிப்படையில் பார்த்தால், கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்தம் 1.42 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அளவிற்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது இந்தியா. இது கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் அப்படியே இரட்டிப்பாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்கள் (ஏப்ரல்-அக்டோபர்) என்ற அளவில் பார்த்தாலும், ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு அதிகரிக்கவே செய்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் 7 மாதங்களில், 17.62 மில்லியன் டன் ஈரான் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது.
இது கடந்த நிதியாண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 38.41 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பணத்தின் அடிப்படையில் பார்த்தால், நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் 9.16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ஈரான் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது.
இது கடந்த நிதியாண்டின் முதல் 7 மாதங்களை காட்டிலும் 100 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்க விஷயம். அதுவும் அமெரிக்க தடை போன்ற பிரச்னைகள் நிலவும் சூழலிலும் தொடர்ச்சியாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரித்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்தது. ஆனால் அதன்பின் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்றே குறைக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அந்த வகையில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்திருப்பதும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பிற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!