TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
ஆப்பிள் நிறுனவத்தின் ஐகார் 2020ல் விற்பனைக்கு வருகிறது?
உலகின் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது புதியவிதமான தரமான தயாரிப்புகள் மூலம் தனது வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. உலகில் பலர் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
டெக்னாலஜி துறையில் முன்னனியில் உள்ள இந்த நிறுவனம் தற்போது ஆட்டோ மொபைல் துறைக்கு வருகிறது. இதற்கான பணியை கடந்த 2014ம் ஆண்டே துவங்கிவிட்டது. ஆப்பிள் நிறுவனம் தானாக இயங்கும் கார்களை தயாரித்து வருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு சுமார் 1000 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி அவர்களை கார் தயாரிப்பு குறித்து ஆய்வு ரகசிய இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது அந்த குழு முழு தொழிற்நுட்ப டிசைனுடன் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொழிற்நுட்பத்தை பரிசோதிக்க ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே லெக்ஸஸ் ஆர்எக்ஸ்750எச் என்ற காரை வாங்கியுள்ளது. அதில் இந்த தொழிற்நுட்பத்தை பொருத்தி அமெரிக்காவில் உள்ள ரோட்டில் அந்நாட்டு அரசின் அனுமதியுடன் பரிசோதித்து பார்த்தது. இந்த வீடியோவை கீழே பாருங்கள்
இந்த பரிசோதனை வெற்றியடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்டமாக 27 கார்களில் இதை பொருத்தி டிராக்களில் வேறு வேறு பாதைகளில் ஓட்டி டிரையல் பார்க்கவுள்ளனர். இதன் மூலம் விபத்துக்களில் இருந்து ஆப்பிள் கார்கள் எப்படி காத்துக்கொள்கிறது. மோசமான ரோடு மற்றும் வானிலைகளை எப்படி சமாளிக்கிறது என பரிசோதிக்கவுள்ளனர். அதற்காக அவர்களுக்கு அனுமதியும் கிடைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் நடத்தி வரும் இந்த ஆய்வுக்கு பிராஜக்ட் டைட்டான் என பெயரிட்டுள்ளது.
இந்த பரிசோதனை வெற்றியடையும் பட்சத்தில் உடனடியாக தயாரிப்புகளை துவங்க வரும் 2019 இறுதி அல்லது 2020ல் கார்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் அமெரிக்காவில் ஓடுவதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆமெரிக்க அரசிடம் சில சட்டங்களுக்கான விளங்கங்களையும், சில சட்ட திருத்தங்களையும் மேற்கொள்ள கோரியுள்ளது.
இது குறித்து கடந்த 2017ம் ஆண்டே ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் இந்த காரின் டிசைன் மாடலுடன் டி.வி.களில் பேசினார். அவர் கூறுகையில் :"ஆப்பிள் நிறுவனம் ஆட்டோ மொபைல் துறையிலும் தங்களது தடத்தை பதிக்கவு்ளளது. இதற்காக டிரைவிங் தொழிற்நுட்பத்தை தயாரித்து வருகிறோம். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2008ம் ஆண்டு ஐபோன் ரிலீஸ் ஆகிய புதிதில் கார்களை தயாரிக்கும் எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் அது அப்பொழுது முடியவில்லை, இப்பொழுது அதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம் " என கூறியிருந்தார்.
தற்போது வரை ஆப்பிள் நிறுவனம் தானாக கார் இயங்கும் இயங்குதளத்தைதான் உருவாக்கி அதை மற்ற கார்களில் இன்ஸ்டால் செய்து பரிசோதனை நடத்தி வருகிறது. தற்போது அந்த இயங்குதளம் இயங்கும் ஹார்டுவேர்கள் மற்றும் மற்ற டிசைன்களை செய்யவும் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே பிளாக்பெர்ரியின் க்யூ.என்.எக்ஸ் நிறுவனம் ஆட்டோமோட்டிவ் சாப்ட்வேர்களை செய்து வருவதால அந்த நிறுவனத்தின் பணியாட்களை வேலைக்கு எடுக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தற்போது ஆப்பிள் நிறுவனம் apple.car, apple.cars, apple.auto, ஆகிய இணையதள முகவரி பெயர்களையும் அதற்காக வாங்கியுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் இந்த காருக்கு வழக்கம் போல i car, என்றே பெயரிட்டுள்ளது.
தற்போது ஆப்பிளின் ஐகாரை தயாரிக்க நிசான், டொயோட்டா ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதற்கட்டமான ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்த காரின் டிசைனை மற்ற நிறுவனங்களில் தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் ஏற்கனவோ ஆட்டோமெட்டிங் கார்களை தயாரிக்க ஆய்வுகள் நடத்தி வருகிறது. விபத்துக்கள், பேரிடர்கள் ஆகிய சம்பவங்களில் இருந்து கார் எப்படி தற்காத்துக்கொள்ளவேண்டும் என ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஆப்பிள் காரில் உள்ள சில அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இவை அதிகாரபூர்வ அறிவிப்புகள் இல்லை.முதலில் ஆப்பிள் காரின் டோர்கள் தானாக இயங்குக்கூடியது. காரின் டோரில் நீங்கள் கை வைக்க வேண்டிய அவசியமே இல்லை.
காரின் உட்புறத்தில் ஸ்டியரிங் வீல், பேடல், என எதையும் அவர்கள் பொருத்தப்போவதில்லை, கார் முழுவதும் தானியங்கி காராக மட்டுமே செயல்படும், காரின் உட்புறம் ஆர்கியூமென்டட் ரியாலிட்டி டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் படம் பார்ப்பது, பாட்டுகேட்பது என பயணத்தின் போது பொழுதை கழிக்கலாம்.
இந்த காரை உருண்டையான வீல்களை கொண்டு வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் காரை திருப்பாமலேயே காரை பக்கவாட்டு வழியாக பயணிக்க வைக்க முடியும். இது சில இடைஞ்சல்களான தெருக்களிலும், பார்க்கிங் செய்யும் போதும் அதிகம் பயன்படும்.
இந்த கார் பெட்ரோல்/ டீசல் இல்லாமல் முழுமையாக எலெக்ட்ரிக்கில் இயக்குகிறது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் சுமார் 320 கி.மீ. வரை பயனிக்கும் திறனுடன் இதை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் நீங்கள் காரை விட்டு இறங்கி காரை தானாக பார்க்கிங் செய்யது கொள்ளவும், நீங்கள் காரில் செல்ல நினைத்தால் ஆப்பிள் செல்போன் ஆப்ஸ் மூலம் காரை தானாக உங்கள் பகுதிக்கு கொண்டு வரும் திட்டத்தையும் அவர்கள் வைத்துள்ளனர்.
இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 62 லட்சம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த காரை இந்தியாவில் ஓட்ட அனுமதியில்லை, ஒரு வேலை கார் விற்பனைக்கு வரும் முன் இந்தியாவின் சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டால் காரை இந்தியாவிலும் ஓட்ட முடியும்.
இந்த தகவல் அனைத்தும் ஆப்பிள் ஐகார் குறித்து மக்கள்மத்தியில் பேசப்படும் தகவல்கள் தான். கார்களை தானாக்க இயக்கும் தொழிற்நுட்பத்தை வடிவமைத்து வருகிறோம் வரும் காலத்தில் காரை தயாரிக்கவுள்ளோம், என்பதை தவிர வேறு எந்த அதிகாரபூர்வ தகவலையும் ஆந்நிறுவனம் வெளியிடவில்லை.
Apple car photo Credit: Carwow
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:
01.அடேங்கப்பா கூகுள் மேப்பில் இவ்வளவு அம்சங்களா!
02.மஹிந்திரா ஜென்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை ஓட்டம்!!
03.ரயில் எஞ்சின் சக்கரங்கள் வழுக்குவதை சமாளிக்க ஓட்டுனர்கள் கையாளும் எளிய யுக்தி!!
04.பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் கலக்க வரும் புதிய மாருதி பலேனோ கார்!!
05.உங்கள் கார் "தள்ளு" மாடல் வண்டியா?; நவீன கார்களை தள்ளி ஸ்டார்ட் செய்ய முடியுமா?