Just In
- 1 hr ago ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- 4 hrs ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 5 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 6 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
Don't Miss!
- Movies AR Murugadoss: 5 வருஷத்துக்கு முன்னாடியே சல்மான்கிட்ட கதையை சொல்லிட்டேன்.. ஏஆர் முருகதாஸ் வெளிப்படை!
- News தமிழகத்தில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்!இதையெல்லாம் செய்ய கூடாது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..
லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை, இந்திய நிறுவனமான அசோக் லேலண்ட்டின் துணை நிறுவனங்களுள் ஒன்றான ஆப்ட்ரா பிஎல்சி வென்றுள்ளது.
லண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை, இந்திய நிறுவனமான அசோக் லேலண்ட்டின் துணை நிறுவனங்களுள் ஒன்றான ஆப்ட்ரா பிஎல்சி வென்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் அசோக் லேலண்ட் லிமிடெட் (ALL). இதன் தலைமையகம், ஆசிய கண்டத்தின் டெட்ராய்டு என வர்ணிக்கப்படும் தமிழக தலைநகர் சென்னையில் அமைந்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்தை, ஹிந்துஜா குரூப் நிர்வகித்து வருகிறது.
வணிக வாகன (commercial vehicle) உற்பத்தியில், இந்தியாவின் 2வது மிகப்பெரிய நிறுவனம் அசோக் லேலண்ட். உலக அளவில் அதிக அளவிலான பஸ்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், அசோக் லேலண்ட் 4வது இடம் பிடித்துள்ளது.
இதுதவிர டிரக்குகளையும் (trucks) அசோக் லேலண்ட் உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான டிரக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், அசோக் லேலண்ட் தற்போது 12வது இடத்தில் உள்ளது.
இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின், துணை நிறுவனங்களுள் ஒன்று ஆப்ட்ரா பிஎல்சி. இது இங்கிலாந்து நாட்டின் பிரபலமான பஸ் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. ஆப்ட்ரா பிஎல்சி நிறுவனத்தின் பெருமளவிலான பங்குகளை அசோக் லேலண்ட் தன் கைவசம் வைத்துள்ளது.
இந்த சூழலில், இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் மாநகர போக்குவரத்து பயன்பாட்டிற்காக, 31 எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை வினியோகம் செய்வதற்கான புதிய ஆர்டரை, அசோக் லேலண்ட்டின் துணை நிறுவனமான ஆப்ட்ரா பிஎல்சி நிறுவனம் வென்றுள்ளது.
டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் ( Transport for London-TfL) எனும் அரசு நிறுவனம்தான் இந்த ஆர்டரை ஆப்ட்ரா பிஎல்சி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. TfL என்பது ஓர் அரசு அமைப்பாகும். கிரேட்டர் லண்டனின் போக்குவரத்திற்கு, TfL நிறுவனமே முழு பொறுப்பு.
டபுள் டக்கர் பஸ்கள் என்பது லண்டன் மாநகரின் அடையாளங்களில் ஒன்று. அவை அங்கு மதிப்புமிகுந்த ஒரு விஷயமாக கருதப்படுகின்றன. இந்த சூழலில்தான், இந்திய நிறுவனமான அசோக் லேலண்ட்டின் துணை நிறுவனம், எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை பெற்றுள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வினோத் கே.தாசரி கூறுகையில், ''இது நாங்கள் மட்டும் பெருமை அடைந்து கொள்ள கூடிய விஷயம் அல்ல. நமது நாட்டிற்கே பெருமையான ஒரு தருணம் இது'' என்றார். எலக்ட்ரிக் பஸ்கள் சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு, அசோக் லேலண்ட் நிறுவனம் புத்திசாலித்தனமாக முதலீடு செய்துள்ளது என்றே சொல்லலாம். இது அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு நீண்ட கால அடிப்படையில் பயன்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதுதவிர பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை, சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்தான்.
எனவே உலகின் பல்வேறு நாடுகளும் வெகு வேகமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன. பல்வேறு நாடுகளின் அரசுகள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
கார் வாங்க போறவங்க கூகுளில் விரும்பி தேட கூடிய தகவல்! எந்த பிராண்ட் கார்கள் அதிகம் இந்தியாவில் விற்பனையாகுது!
-
சோப்பு டப்பாக்களுக்கு பாடம் நடத்தும் டாடா கார்... விலை இவ்ளோதானா... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
-
இந்த வயசில் இப்படி ஒரு ஆசையா! சேர் போட்டு ராயல் என்பீல்டு பைக்கில் ஏறிய மூதாட்டி! காரணத்தை கேட்டதும் ஆச்சரியம்