அநியாய வசூல் ஆட்டோகளுக்கு ஆப்பு; அரசு ஒத்துழைப்புடன் பஜாஜ் அதிரடி
அநியாய வசூலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டிகளுக்கு ஆப்பு வைப்பு வகையில் பஜாஜ் நிறுவனம் கியூட் குவார்ட்ரிசைக்கிள் என்ற புதிய ரக வாகனத்தை களம் இறக்க தயாராக உள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சியில் உரைந்
அநியாய வசூலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டிகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பஜாஜ் நிறுவனம் கியூட் குவார்ட்ரிசைக்கிள் என்ற புதிய ரக வாகனத்தை களம் இறக்க தயாராக உள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்த வாகனம் வந்தால் இனி ஆட்டோக்களை மியூசியத்தில் தான் பார்க்க முடியும்.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்திய அரசு குவார்ட்ரிசைக்கிள் ரக வாகனத்திற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இதையடுத்து பஜாஜ் நிறுவனம் தனது பஜாஜ் கியூட் குவார்ட்ரிசைக்கிளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த கியூட் குவார்ட்ரிசைக்கிள் நம்முரில் ஓடும் ஆட்டோக்களை போல பயன்படுத்த முடியும். இதை கமர்ஷியல் வாகனமாக மட்டுமே பயன்படுத்த அரசு அனுமதியளித்துள்ளது தனியாக யாரும் வாங்கி பயன்படுத்த முடியாது.

இந்த குவார்ட்ரிசைக்கில் தற்போது இந்திய ஆட்டோமொபைல் ரிசர்ச் சென்டரின் ஆய்விற்காக அனுப்பபட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தாண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜ் நிறுவனம் இந்த குவார்ட்ரிசைக்கிளை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இது நான்கு வீல்களை கொண்டது. அதனால் தற்போது உள்ள ஆட்டோக்களை விட பாதுகாப்பனவை மற்றும் உறுதியானவை.

பஜாஜ் நிறுவனத்திற்கு மாதம் 5000 கியூட் குவார்ட்ரிசைக்கிளை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. மேலும் இதன் லுக் கார் போல நான்கு சீட் உடையதாக இருக்கும்.

இந்த கியூட் குவார்ட்ரிசைக்கிளில் 217 சிசி4 ஸ்டோக், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது லிக்யூட் கூல் பியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் உள்ளது. இது 13 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

இந்த குவார்ட்ரிசைக்கிள் அதிகபட்சமாக 70 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. இது 2752 மிமீ நீளும், 1312 மிமீ அகலம் மற்றும் 1650 மிமீ உயரம் கொண்டது. இந்த குவார்ட்ரிசைக்கிள் சிஎன்ஜி வேர்ஷனிலும் வருகிறது.

இந்த கியூட் குவார்ட்ரிசைக்கிள் முதலில் கமிர்ஷியல் பயணிகள் வாகனங்களுக்காக மட்டுமே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிற்காலத்தில் இது சரக்குகளை ஏற்றி செல்லும் லோடு பயன்பாட்டிற்காகவும் மாற்றியமைக்க பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தவாகனம் விற்பனைக்கு வந்தால் தற்போது அந்நியாய வசூலில் ஈடுபட்டு வரும் ஆட்டோ காரர்களுக்கு பெரும் ஆப்பு தான். அவர்கள் எல்லாம் இந்த குவார்ட்ரிசைக்கிளுக்கு மாறி தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் ரிக்ஷா ஒழிந்தது போல். இனி ஆட்டோக்களும் ஒழிந்து விடும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








