கிராமங்களை குறி வைக்கும் கார் நிறுவனங்கள்..! அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாஸ்டர் பிளான் ரெடி..!
வரும் 23ம் தேதி ஹூண்டாய் சான்ட்ரோ காரை மீண்டும் புதிதாக புதிய மாடலில் அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய் நிறுவனம். இது பழைய சான்ட்ரோ கார் இல்லை. இதில் உள்ள அனைத்துமே புதியது. பழைய காரின் பெயர் சான்ட்ரோ
வரும் 23ம் தேதி ஹூண்டாய் சான்ட்ரோ காரை மீண்டும் புதிதாக புதிய மாடலில் அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய் நிறுவனம். இது பழைய சான்ட்ரோ கார் இல்லை. இதில் உள்ள அனைத்துமே புதியது. பழைய காரின் பெயர் சான்ட்ரோ மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றதாலும், இதே செக்மெண்ட் கார் என்பதாலும் இதற்கும் அதே பெயரையே வைத்துள்ளது ஹூண்டாய் நிறுவனம்.

இதே போல ஹூண்டாயை தொடர்ந்து மாருதி சுஸூகி, ரெனோ-நிஸ்ஸான், டட்சன், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் இதே போல பழைய காரின் பெயரை பயன்படுத்தி புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

தற்போது இந்தியா விரைவில் ஜப்பானை முந்தி உலகின் மிகப்பெரிய ஏ செக்மெண்ட் கார்களின் சந்தையாக மாறவுள்ளது. இந்த ரக கார்களில் உலக தயாரிப்புகளில் 30 சதவீத சந்தை இந்தியாவில்தான் இருக்க போகிறதாம்.

தற்போது 17.3 சதவீத ஹேட்ச்பேக் கார்கள்தான் இந்தியாவில் விற்பனையாகிறது. ஆனால் கார் தயாரிப்பாளர்கள் தங்கள் கார் விற்பனையின் யுக்தியை மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதன்படி சிறிய நகரங்கள், கிராமங்களில் வசிப்பவர்களை குறி வைத்து அவர்களது விற்பனையை கொண்டு செல்லமுடிவு செய்துள்ளனர்.

இதற்காக புதிதாக மாற்றம் பெரும் கார்களை ரூ.6 லட்சத்திற்கும் குறைவான என்ட்ரி லெவல் மார்கெட்டில் மட்டும் களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ளவர்களிடம் லட்சக்கணக்கான கார்களை கொண்டு செல்ல முடியும் என திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இந்தியாவில் சிறிய ரக கார்கள் எல்லாம் உலகின் விலை குறைந்த கார்களின் ரகமாக இருப்பதால் இவர்கள் கொண்டு வரும் கார்களும் அந்த ரக கார்களாக இருக்கும். இதனால் மார்கெட்டிங்கிற்கு மிக எளிதாக இது அமையும்.

ஹூண்டாய் நிறுவனம் இறுதியாக என்டரி லெவல் செக்மெண்டில் இயான் காரை களம் இறக்கியது. மக்கள் மத்தியில் இந்த காருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லை.

பெரும்பாலும் சிறிய ரக கார்களை எல்லாம் புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள்தான் அதிகமாக வாங்குகிறார்கள். ஏற்கனவே கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறிய ரக கார்களை வாங்குவதில் பெரிய அளவில் நாட்டம் இல்லை.

அதே நேரத்தில் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்களும் என்ட்ரி லெவல் கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் அவர்களுக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. வேறு வழியின்றி சில காலங்களில் மார்கெட்டை விட்டே வெளியே செல்லும் சூழ்நிலை உருவானது. சிலர் மார்கெட்டில் அதிக விலை கார்களை மட்டுமே விற்பனைசெய்து வருகின்றனர்.

டாடா நிறுவனம் கொண்டு வந்த நானோ பெரிய அளவில் மார்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவில் சிறிய சதவீத விற்பனையை கூட நானோவால் எட்ட முடியவில்லை. இதற்கு மக்கள் மத்தியில் இது சீப்பானா கார் என்ற பிம்பம் ஏற்பட்டு விட்டது. இதே கதை தான் டட்சன்கோ, ரெடி கோ, ரெனோ க்விட் ஆகிய கார்களுக்கும். மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை.

மேலும் மார்கெட்டில் பைனான்ஸ் சுலபமாகி விட்டது. மேலும் மக்களிடமும் வாங்கும் திறனும் ஏக போகத்திற்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முதன் முறையாக கார் வாங்கும் சிலரும் என்ட்ரி லெவல் கார்களை விட்டு விட்டு நேரடியாக ப்ரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் செடான் ஏன் சிலர் எஸ்யூவி கார்களுக்கு கூட சென்று விடுகின்றனர்.
எங்களது டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்..!

தற்போது ஹூண்டாய் எலைட் ஐ20, மாருதி சுசூகி, பலினோ போன்ற கார்களை வைத்திருப்பவர்களில் 50 சதவீதமானோர் கிட்டத்தட்ட புதிதாக கார் வாங்கியவர்கள்தான் எனவும், மேலும் மிட் சைஸ் கார்களில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்கள் வைத்திருப்பவர்களில் 5ல் 1 பங்கினர் புதிதாக கார் வாங்கியவர்கள் எனவும் ஒரு ஆய்வு சொல்கிறது.

மேலும் பயன்படுத்தப்பட்ட கார்களை முதலில் பயன்படுத்திவிட்டு மீண்டும் புதிய கார் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதற்கிடையில் உபேர், ஓலா போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் கார்களை இயக்குவதால் பலர் கார் வாங்கும் திட்டத்தை கைவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியாவில் உள்ள டாப் 10 நகரங்களில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு என்ட்ரி லெவல் கார்களின் விற்பனை சீராகதான் இருக்கும். அடுத்த 10 நகரங்களில் என்ட்ரி லெவல் கார்களின் விற்பனை 4 சதவீதம் அதிகரிக்கும் எனவும், அதற்கு அடுத்த 20 நகரங்களில் என்ட்ரி லெவல் கார் விற்பனை வளர்ச்சி 5-6 சதவீதம் வரை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது என்ட்ரி லெவல் கார் விற்பனையில் முன்னணியில் இருப்பது மாருதி சுசூகி நிறுவனம்தான். இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள 6,40,000 கிராமங்களில் 3,50,000 கிராமங்களுக்கு தங்கள் கார்களை கொண்டு சேர்த்துள்ளது. என்ட்ரி லெவல் மார்கெட்டில் 80 சதவீத மார்கெட் மாருதியிடம்தான் உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை என்ட்ரி லெவல் கார்களுக்கான மவுசு என்றுமே குறையாது என்றும், வரும் காலத்தில் எஸ்யூவியை நோக்கி சென்றவர்கள் கூட என்ட்ரி லெவல் கார்களை தேடி வரலாம் என்றும், அவர்களது வாழ்க்கை முறைகள் மாறும் போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது கணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications