Just In
- 3 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 14 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 57 min ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 2 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அட இதுல கூட தமிழர்கள் கெத்துதான்… மிரண்டு போனது மத்திய அரசு
இந்தியாவிலேயே சென்னையில் தான் மக்கள் அதிக அளவில் பைக்களை பயன்படுத்துவதாகவும், அதே நேரத்தில் அரசு போக்குவரத்தும் இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிக மக்களுக்கு பயன்பெறுவதும் சமீபத்தில் நடந்த ஆய்வு முடி
இந்தியாவிலேயே சென்னையில் தான் மக்கள் அதிக அளவில் பைக்களை பயன்படுத்துவதாகவும், அதே நேரத்தில் அரசு போக்குவரத்தும் இந்தியாவிலேயே சென்னையில் தான் அதிக மக்களுக்கு பயன்பெறுவதும் சமீபத்தில் நடந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்த முரணான விஷயத்திற்கு என்ன காரணம் என்றே தெரியாமல் அதிகாரிகள் விழித்து வருகின்றனர்.
இந்தியாவின் மக்கள் தொகை உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இவ்வளவு மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்வது என்பது அரசிற்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது. இந்திய மக்களின் வாழ்வியல் முறையும் இதற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் பல பகுதிகள் இருந்தாலும் நகரங்களில்தான் அதிக மக்கள் வாழ்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் பல நிறுவனங்கள் தொடர்ந்து நகரங்களில் அமைக்கப்படுவதுதான்.
மக்கள் தங்கள் பணி நிமித்தமாக கொஞ்சம் கொஞ்சமாக நகரங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். ஒரு ஊரில் எவ்வளவு மக்கள் வாழ்கின்றனர்? என்பதை கணக்கிட அந்த நகரில் சாலைகளில் பயணித்தாலே போதும்.
அங்குள்ள கூட்ட நெரிசல் மற்றும் ஜன நெருக்கடியை கணக்கிட்டு அந்த ஊரின் மக்கள் பலத்தை நம்மால் உணர முடியும். இப்படியாக நகரங்களில் வாழ்பவர்கள் எதில் பயணிக்கிறார்கள்? பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துகிறார்களா? அல்லது சொந்தமாக வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறார்களா? என்பதை வைத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை கணித்து விடலாம்.
இவ்வாறு மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சமீபத்தில் இந்தியா முழுவதும் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் எந்தெதந்த வகையான வாகனங்களை போக்குவரத்திற்காக மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்? என்பதை கணக்கிட்டு ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டனர்.
இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டவர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி. இந்த ஆய்வு முடிவுகள் மத்திய அரசிற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசிற்கு இந்த ஆச்சரியத்தைஏற்படுத்தியவர்கள் தமிழர்கள்தான்.
ஆம் ஆந்த ஆய்வு முடிவில் இந்தியாவிலேயே அதிகமாக மக்கள் பைக்குகளை பயன்படுத்துவது சென்னையில்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னையில்தான் மக்கள் அரசு போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக சொந்தமாக வாகனம் பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ள நகரங்களில் பொது போக்குவரத்தை அதிகமாக மக்கள் பயன்படுத்துவார்கள். பைக் என்பது சொந்தமான வாகனமாகவும், அரசு போக்குவரத்து என்பது பொது வாகனமாகவும் செயல்படும் நிலையில், சென்னை மக்கள் இவை இரண்டையுமே அதிகம் பயன்படுத்ததுகின்றனர்.
இந்த ஆய்வின் படி சென்னையில் உள்ள 75 சதவீத மக்கள் அரசு போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இது சென்னையில் உள்ள ஒரு அரசு பஸ் நாள் ஒன்றிற்கு சராசரியாக 1300 பயணிகளை அழைத்து செல்கிறது. இந்தியாவிலேயே ஒரு பஸ் ஒரு நாளுக்கு இத்தனை பயணிகளுக்கு பயன்படுவது சென்னையில்தான்.
சென்னையில் பஸ்கள் இவ்வளவு அதிகமான மக்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் இயங்குவதற்கு முக்கியமான காரணம் பஸ்களில் உள்ள அதிக இட வசதி, பஸ் டிக்கெட்டின் விலை. பயணிகளின் தேவை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் பஸ்களின் டிரிப் நேர அமைப்பு, பஸ் இயக்க தடங்களின் தேர்வு, பஸ் இயங்கும் தடங்களில் இயங்கும் பஸ்களின் எண்ணிக்கை ஆகியவை தான் காரணம்.
இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனடியாக பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
அதே நேரத்தில் சென்னையில்தான் அதிகமாக பைக்குகளும் பயன்படுத்தப்படுகிறது. சொந்த வாகனம் வாங்க நினைக்கும் பலர் கார்களை விட பைக்குகளைதான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.