Just In
- 1 hr ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 6 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 7 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 7 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பெட்ரோல் விலையை குறைக்க சீனா செய்த அதிரடி... மோடி அரசு இதை நிச்சயம் செய்யாது.. காரணம் இதுதான்
பெட்ரோல் விலையை குறைப்பதற்காக அதிரடியான நடவடிக்கை ஒன்றை சீனா எடுத்துள்ளது.
பெட்ரோல் விலையை குறைப்பதற்காக அதிரடியான நடவடிக்கை ஒன்றை சீனா எடுத்துள்ளது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மட்டுமே செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு இதை செய்யுமா? என்பது கேள்விக்குறியே.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒருங்கிணைந்து ஓபெக் (Organization of the Petroleum Exporting Countries) என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்வதில் ஓபெக் கூட்டமைப்பின் கையே ஓங்கியுள்ளது.
கச்சா எண்ணெய்தான் பெட்ரோல், டீசலின் மூலப்பொருள். சில சமயங்களில் வேண்டுமென்றே கச்சா எண்ணெய் உற்பத்தியை ஓபெக் கூட்டமைப்பு நாடுகள் குறைத்து விடுகின்றன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்து விடுகிறது.
அதாவது செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு கச்சா எண்ணெய்யின் விலை உயர்த்தப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குதான் இது அதிக பிரச்னையை ஏற்படுத்துகிறது.
ஏனெனில் உலகிலேயே கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மிக அதிக தொகையை செலவிடும் நாடுகளாக இந்தியா மற்றும் சீனா ஆகியவை உள்ளன. இதனால் இவ்விரு நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதில், இந்தியா ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் செலவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் இவ்வளவு தொகையை செலவிட்டால் நாட்டின் பொருளாதாரம் என்ன ஆவது?
எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இத்தகைய வாகனங்களை வாங்கும் நபர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து விட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். முதலில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை வெகுவாக குறைந்து, நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும். இரண்டாவதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும்.
இதுதவிர சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை உண்டாக்கி வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை.
எனவேதான் இந்தியா, சீனா ஆகியவை போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டுள்ளன. ஆனால் இந்த போட்டியில் இந்தியாவை காட்டிலும் சீனாதான் ஒரு படி மேலே உள்ளது என்ற உண்மையை மறுக்க முடியாது.
எதிர்காலத்தில் சீனா முழுவதும் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் மட்டுமே இயங்க வேண்டும் என அந்நாட்டு அரசு விரும்புகிறது. இதற்காக தற்போது அதிரடியான புதிய சட்டம் ஒன்றை சீனா அமலுக்கு கொண்டு வரவுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, சீனாவில் செயல்பட்டு வரும் கார் உற்பத்தி நிறுவனங்கள், குறிப்பிட்ட அளவு எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை தயாரித்தே ஆக வேண்டும். 2019ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த புதிய சட்டம் அமலுக்கு வருகிறது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட அளவு எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை தயாரிக்காத கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அல்லது தொழிற்சாலையை அரசாங்கம் இழுத்து மூடி விடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 2025ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 70 லட்சம் எலெக்ட்ரிக் அல்லது ஹைபிரிட் கார்கள் விற்பனையாக வேண்டும் என சீனா இலக்கு வைத்துள்ளது. அந்த இலக்கை எட்ட வேண்டும் என்பதற்காகதான் அங்கு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சீனாவில் 30,000க்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்யும் அல்லது இறக்குமதி செய்யும் அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும். அப்படியானால் கிட்டத்தட்ட அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களும் இந்த சட்டத்தின் கீழ் வந்து விடும் என புரிந்து கொள்ளலாம்.
ஆனால் இந்தியாவில் இப்படி கடுமையான சட்ட திட்டங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை. எனவேதான் எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகன போட்டியில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி விட்டு சீனா வெகு வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!