இந்தியாவில் இல்லாத வாகனங்களுக்கு சலுகை அறிவித்த மோடி அரசு.. இதுக்கு பேருதான் தொலைநோக்கு பார்வையா?

இந்தியாவில் இல்லாத வாகனங்களுக்கு மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது. மத்திய அரசு சலுகை அறிவித்துள்ள வாகனங்கள் ஒன்று கூட இந்தியாவில் இல்லை என்பதுதான் ஹைலைட்டே.

இந்தியாவில் இல்லாத வாகனங்களுக்கு மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது. மத்திய அரசு சலுகை அறிவித்துள்ள வாகனங்கள் ஒன்று கூட இந்தியாவில் இல்லை என்பதுதான் ஹைலைட்டே.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

இதனால் நடுத்தர வர்க்க மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க தேவையான திட்டங்கள் எதுவும் மத்திய அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. எனவே பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

இப்படியான சூழலில், தொலைநோக்கு திட்டங்களை மட்டுமே மத்திய அரசு தீட்டி வருகிறது. அதாவது கச்சா எண்ணெய்தான் பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருள். ஆனால் அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, தனது கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து வருகிறது.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

உலக அளவில் பார்த்தால், கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. ஒரு ஆண்டுக்கு மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிடுகிறது.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவதால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. எனவே பெட்ரோல், டீசல் அல்லாது மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு தற்போது ஊக்குவித்து வருகிறது.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

அதாவது எலெக்ட்ரிக் வாகனங்கள் அல்லது சிஎன்ஜி, எத்தனால், மெத்தனால் உள்ளிட்ட எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை வாங்கும் மக்களை மத்திய அரசு ஊக்கப்படுத்துகிறது. எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு மக்கள் மாறினால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பது உண்மையே.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

முதலாவதாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவு கணிசமாக குறையும். இதன் காரணமாக கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்து, அதன் விலை சரியும் என்பது மத்திய அரசின் கணிப்பு.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

இதுதவிர பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகை, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை உண்டாக்கி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக கருதப்படுகின்றன.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

எனவேதான் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் அத்தகைய வாகனங்களை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

எனவே அதிக அளவில் எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஃபேம் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

இதன் அடுத்த கட்டமாக எலெக்ட்ரிக் மற்றும் 100 சதவீத எத்தனால் அல்லது மெத்தனாலில் இயங்கும் வாகனங்கள், மாநில போக்குவரத்து துறைகளிடம் இருந்து, கமர்ஷியல் பெர்மிட்களை பெற தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

கமர்ஷியல் பெர்மிட்களை பெற வேண்டும் என்ற விதியில் இருந்து எலெக்ட்ரிக் மற்றும் 100 சதவீத எத்தனால் அல்லது மெத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கு விலக்கு அளிப்பது என்ற முடிவை மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் எடுத்துள்ளது.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

இதுகுறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''கமர்ஷியல் பெர்மிட்களை பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதன் மூலமாக இனி எலெக்ட்ரிக் மற்றும் 100 சதவீத எத்தனால் அல்லது மெத்தனாலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த வாகனங்களுக்கு கமர்ஷியல் பெர்மிட்களில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்தை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிதான் முழு முயற்சி எடுத்தார்.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

இதுபோன்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, நாம் கச்சா எண்ணெய்யை அதிகம் சார்ந்து இருக்க வேண்டியது இல்லை. எனவே வருங்காலத்தில் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு குறையும்'' என்றார்.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

ஆனால் 100 சதவீதம் எத்தனால் அல்லது மெத்தனாலில் இயங்கும் வாகனங்கள் ஒன்று கூட இந்தியாவில் தற்போது இல்லை என்பதுதான் ஹைலைட்டே. அத்தகைய வாகனங்கள் இந்திய சந்தைக்கு எப்போது முழுமையாக வரும்? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

அதே நேரத்தில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது தங்களின் கவனத்தை திருப்பும் பொதுமக்களின் எண்ணிக்கையும் ஓரளவிற்கு அதிகரித்து கொண்டுள்ளது.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

ஆனால் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து பெட்ரோல், டீசல் விலை குறைவது என்பதெல்லாம் தற்போதைக்கு நடக்காது. அதற்கு நீண்ட காலம் ஆகும். எனவே உடனடியாக பெட்ரோல், டீசல் விலை குறைய மத்திய அரசு தற்போது என்ன செய்யப்போகிறது? என்பதே மக்களின் கேள்வி.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

ஆனால் அந்த கேள்விக்கு மத்திய அரசிடம் பதில் இல்லை. ஒருவேளை பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு வரும் வரிகளை குறைப்பதன் மூலமாகவோ அல்லது பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலமாகவோ, அதன் விலையை வெகுவாக குறைக்க முடியும்.

ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த இந்தியா.. மோடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் கதி கலங்கும் அரபு நாடுகள்

எனினும் மத்திய, மாநில அரசுகள் அதனை செய்ய மறுக்கின்றன. வரிகள் மூலம் கிடைக்கும் பெருமளவு வருவாயை இழந்து விடக்கூடாது என்பதே அதற்கான முக்கிய காரணம். இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காமல் இருப்பதுதான் மத்திய, மாநில அரசுகள் மீதான மக்களின் அதிருப்திக்கு காரணம்.

Most Read Articles

ஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Commercial Permits Not Required For Electric And 100% Ethanol, Methanol Vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X